பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைகுண்ட நாதன் 17.3

தாலும் காலத்தாலும் அளவிடப் பெறாதவன்; எங்கும் நிறைந்திருப்பவன். மூன்றுவித சேதந அசேதத பரிணாமரூபமான வேறுபாட்டின் குறைகள் (விகார தோஷங்கள்) தட்டாதவன். அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கு வகைப்பட்ட பலன்களையும் உயிர் கட்கு நல்கி அவற்றின் புகலிடமாக இருப்பவன். தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன். ஞானம், சக்தி, பலம், ஐசுவரியம், வீரியம், தேஜஸ் முதலிய மங்கள குணக் கூட்டங்களால் அலங்கரிக்கப் பெற்றவன். அவனிடம் இக் குணங்கள் ஆதல் அழிதலின்றி எப்பொழுதும் நிறைந் திருக்கும். இவற்றைத் தவிர. வாத்சல்யம், செளசீல்யம் செளலப்பியம் முதலிய எண்ணற்ற குணங்களையும் கொண்டவன். இவ்வுலகினைப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றின் காரண பூதன். சீறார் வீடுகட்டி அழிக்குமாப் போலே இவை யாவும் இவனுக்குத் தன் இச்சையாலே உண்டாகும் கேவல விளையாட்டேயாகும்.

இறைவனுக்கு உருவம் உண்டு. அது திவ்விய மங்கள விக்கிரகம் எனப்படும்.

“கண்கள் சிவந்து பெரியவாய்,

வாயும் சிவந்து கனிந்துள்ளே வெண்பல் இலகுசுடர், இலகு

விலகு மகர குண்டலத்தன், கொண்டல் வண்ணன். சுடர்முடியன்,

நான்கு தோளன், குனிசார்ங்கன் ஒண்சங்கு கதைவாள் ஆழியான்

ஒருவன்’’’ னிந்து - பழுத்து; உள்ளே - அகவாயிலே இலகு -

விலகு  * கின்ற; கொண்ட்ல் - மேகம்; குனி வளைந்த, ஒண் சங்கு - அழகிய சங்கு ஆழி - சக்கரம்}

3. திருவாய். 8. 8 :1