பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கத் தவறிவிட்டார்கள் விழிப்புணர்வு அற்ற சிலர் என்றாலும், நம் மூதாதையருள் விழிப்புணர்வோடு இருந்தவர்கள், அழிந்தனபோக அழியா திருந்த அப்பழம் பாக்களை எல்லாம், அரிதின்முயன்று தேடிக் கொண்டார்கள்.

அவ்வாறு தேடிப் பெற்ற அப்பாக்களை ஊன்றிப் பயின்ற புலமைசால் பெரியார்கள் பலரும் ஒன்று கூடி இருந்தும், இப்பாக்களில் பொதிந்து கிடக்கும் பொருள்வளம், அப்பாக்களின் அடி அளவு ஆகியவற்றை, அளவுகோலாகக் கொண்டு, அப்பாக்களையெல்லாம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்ற தலைப்புக்களில் தொகுத்து நமக்கு அளித்துச் சென்றனர். அவ்வாறு தொகுக்கப் பெற்ற தொகை நூல்களில், இரண்டாவது வரிசையில் நிற்பதான எட்டுத்தொகை நூல்களில் இடம் பெற்றிருக்கும் பாக்களின் நலங்களை, நம்கால மக்களும் உணர்ந்து மகிழ வேண்டும் என்ற அவாவினால் உந்தப் பட்ட காரணத்தால் அவ்வரிசையுள், முதற்கண் வைத்துப் பெருமை செய்யப் பெற்றதான நற்றிணையினை, “நற்றிணை விருந்து” என்ற தலைப்பிலும், இரண்டாம் நிலைபெற்ற தாயினும், “நல்ல குறுந்தொகை” எனச்சிறக்கப் பெற்றதான குறுந்தொகையினைக், “குறுந்தொகைக் கோவை” என்ற தலைப்பிலும், ஆறாவது இடம் அளிக்கப் பெற்றதாயினும் “கற்றறிந்தார் போற்றும் கலி” என்ற சிறப்பினைப் பெற்றதான் கலித்தொகையினைப், “பாலைச் செல்வி”, “குறிஞ்சிக்குமரி”, “மருத நில மங்கை”, “முல்லைக்கொடி”, “நெற்தற் கன்னி” என்ற ஐந்து தலைப்புக்களிலும், முப்பது ஆண்டுகளுக்கு முன்பே விளக்கி வெளியிட்டேன்.

பழந்தமிழர் தொகுத்தளித்த வரிசையிலேயே அவ்வெட்டுத்தொகை நூல் விளக்கங்களையும் அளிக்க வேண்டும் என்