பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஏழை 149 இந்த வேலையையும் இழந்துவிட்டான்! வேறு ஊருக்கே போய்விட்டான்! எவன் இந்தத் ‘தூங்கு மூஞ்சி'யை நம்பி வேலை கொடுப்பான்? என்னமோ பாவம், ஏழையாக இருக் கிறானே என்று இரக்கம் காட்டி வேலை கொடுத்தோம், கொஞ்சமாவது சுறுசுறுப்பு, புத்திக்கூர்மை இருந்தால்தானே! --என்று பேசிக்கொள்கின்றனர், மூட்டை முடிச்சுக்களுடன் வேற்றுார் கிளம்பும் எல்லப்பன் பற்றி தொழிலகத்தில். 'ஏழை' எல்லப்பன் வேறு ஊரில், வேறு வேலையில் அமர்ந்து கொள்ளச் செல்கிறான்--சீவல் பாக்குக் கம்பெ னிக்கு விளம்பர அலுவலாளராக! சீவல் பாக்குக் கம்பெனி சிவராமன், பெரிய அளவில் அபின் கள்ளக்கடத்தல் செய்து வருகிறாள் என்பது தகவல்! கண்டறியச் செல்கிறான் எல்லப்பன், ஏழைக் கோலத்தில்!