பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புதிய பொலிவு 79 யாடாதே, வெக்கமா இருக்கு.. சிரிப்பு பகீல்னு வருது.. அதே, அந்தப் பக்கம் சோளக் கொல்லையிலேதான் சொக் கப்பன் இருக்கிறான்..அவன் காதிலே நான் சிரிக்கிறது விழுந் திச்சி, அவ்வளவுதான். வீட்டுக்கு வந்து கலகத்தை மூட்டி விட்டுத்தான் தூங்கப் போவான்... உன்னை நம்பாமெ நான் வேறே யாரை நம்புவேன். என் மனசிலே அந்த நம்பிக்கை இல்லையானா, இப்படி உங்க கூடப் பழகுவனா, பேசுவனா..ஆனர், 'எதுக்கும், ஆக வேண்டியகாரியத்தை காலாகாலத்திலேமுடிச்சிடவேணும்டி. ஆம்பிள்ளைக மனசு ஒரு வேளைபோல மறுவேளை இருக் காது..எந்தப் பாவி மகனாவது கதை கட்டி ஊரிலே உபத்திர வத்தை மூட்டா த முன்னமேயே, மூணுமுடி போட்டு கிடறது தான் நல்லது'ன்னு இஞ்சிக் கொல்லையார் மக இருக்கா பாரு, பருவதம், அவ சொல்றா... இப்படித்தான் பேசத் தெரிந்தது அந்த வஞ்சிக்கொடி யாளுக்கு. கிராமத்துக் கட்டழகி!எனவே அவளுக்கு, 'அன்பே! ஆருயிரே! இன்பமே! இன்னமுதே! இதய ஜோதி!' என்ற முறையில் பேசத்தெரியாது. 'கண்ணாளா! தங்களைக் கண்ட தும் கதிரவனைக்கண்ட கமலம் மலருவதுபோல என் அகமும் முகமும் ஒருசேர மலருகிறது; வீணையின் நரம்புகளை இசை வல்லான் தொட்டுத் தடவி இனிய கானத்தைப் பிறந்திடச் செய்வதுபோல, என்னைத் தொட்டிழுத்து முத்தமிட்டதும், எனக்கு வாழ்வின் கீதம் வசீகரமாகக் கேட்கிறது' என்றெல் லாம் 'வசனம்' பேசத் தெரியாது; அவள் அப்படிப்பட்ட வசனங்களைச் சினிமாவில் இரண்டோர்முறைகேட்டதுண்டு. அப்போதுகூட, அவள், எப்படி வெட்கத்தைவிட்டு இப்படி யெல்லாம் பேசிக் கொள்கிறார்கள் என்று எண்ணிக் கொள் வாள். அவள் கல்லூரிப் பெண்ணல்ல; காதலுக்காகச் சாம் ராஜ்யங்களை இழக்கத் துணிந்தவர்கள், வாள் முனையை எதிர்த்தவர்கள், ஊர்ப்பகையை ஏற்றுக் கொண்டவர்கள், உருமாறிப் போனவர்கள், உன்மத்தரானவர்கள் ஆகியோர் பற்றிய கதைகளைப் படித்ததில்லை. அவள் கேட்ட இரண் டொரு கதைகளிலே துக்கப்படவும், கஷ்டப்படவும்தான்