பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

 

நமக்குப் பேருதவி செய்துள்ளார். அவருடன் துணை நின்று, வர்ணாஸ்ரமத்தைத் தாக்கித் தகர்க்க வீரர்கள் தேவை. சர் சண்முகத்தை, இத்தகு வீரப்படைக்குத் தலைமைதாங்கி நடாத்திச் செல்லுமாறு நான் - உங்கள் சார்பில் - அனுப்பும் அன்பழைப்புதான் இது. பல காலமாக அவரை, எங்கெங்கோ 'இரவல்' கொடுத்தோம். இனியும் நமக்கும் அவருக்கும் அந்நிலையேதானா ! தமிழகம் தன் வீரப் புதல்வனை, உரிமையுடன் கூவி அழைக்கிறது. " மகனே! மாநிலமெங்கும் உரிமைப் போர் நடக்கிறது. நானோ அரசியல், பொருளியல், சமுதாய மத இயல் சகலவற்றிலும் அடிமைப்பட்டுத் தவிக்கிறேன். நீயோ, யாராருக்கோ சென்று 'சேவை' செய்கிறாய். வீடு திரும்பி வா! பெற்றவளைப் பார்! அவளுக்குற்ற துயர் நீக்கு!" என்று கூறுகிறது. இந் நூலின் கருத்து. இதுவே.

சி.என். அண்ணாதுரை