பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్ర, வல்லிக்கண்ணன்

பளிச்செனப் பார்வையில் படும். பிறகு, ரோட்டு ஒரத்து தோட்டம், வீடுகள் எல்லாவற்றையும் விலைக்கு வாங்கி விட்டவன், கோட்டைச் கவர் மாதிரி காம்பவுண்டு எழுப்பிப் போட்டான். அதனாலே இந்த வீட்டுத் திண்ணையிலிருந்தால் - வாசலில் நின்றால் தெரியக் கூடிய காட்சி இனிமைகள் மறைக்கப்பட்டு விட்டன. -

வெளியே போனால் தீ எரிவது தெரியும். சில சமயங்களில் தீ மிகப் பெரிதாய், பரவலாக எரியும். அப்போது தென்படுகிற காட்சி பிரமாதமாக இருக்கும். பளிச்சிடும் தீ, அதுக்கு மேலே ரொம்பப் பரவித் தென்படும் செவ்வொளிப் பரப்பு-பளிரென அழகாக இருக்கும்.

மேற்குத் தொடர்ச்சி மலை பூரீவில்லிபுத்துர் அருகே மிகப் பெரிதாய், உரயமாய், கிட்டத்தில் இருப்பதாய் தோற்றம் காட்டி நிற்கிறது. முண்டுமுடிச்சுகள், மேடுகள் பள்ளங்கள் எல்லாம் கருநீலமாய் தெளிவாக, கம்பீரமாக, விளங்கும், பகலில் பார்க்கையில்.

ராமச்சந்திரபுரத்தில் தங்கியிருந்த போது, உயரத்தில் ஒரு இடத்தில் தீ எரிவது தெரிந்தது.

ஞாயிற்றுக்கிழமை, துரீவில்லிபுத்துரிலிருந்து புறப்படுகையில் இருட்டு வந்துவிட்டது. மலை மீது அற்புதம் நிகழ்ந்து கொண்டிருந்தது. மிக அதிக எண்ணிக்கையான தீப்பிடித்தல்கள். வட்டமாகவும், 8 மாதிரியும், நேர்கோடாகவும், வளைவுகளாகவும், மேடுகளிலும் பள்ளங்களிலும் தீ செக்கச் செவேலென்று சிரித்து மின்னியது. மிக அருகே, அடிவாரத்தக்கு சமீபத்தில் எரிவது போல் தென்பட்டது. மிக உயரத்திலும் தீ எரிந்து கொண்டிருந்தது. பத்துக்கும் மேற்பட்ட தீக்குவியல்கள் ஒளிமயமாய், அருமையான காட்சி இனிமையாய் - பார்க்கப் பார்க்க இன்னும் பார்க்க வேண்டும் என்ற ஆசையைத் துரண்டுவதாய் தீத் தொகுபபுகள் அருகருகே பிரகாசித்தன. நேரம் ஆகஆக அவற்றின் ஒளித்தன்மை அதிகரித்துக் கொண்டேயிருந்தது.

அது போன்ற காட்சியை அன்றுதான் நான் முதல்ர தடவையாகப் பார்த்தேன். ஒரு அரிய வாய்ப்பு. *

கோயில்களுக்குப் போகிறவர்களில் பெரும். :ே டக்தி உணர்வோடு போகவில்லை. டுரிஸ்ட் பஸ்கள் தும், வேன்'களிலு. 'கற்றுலா என்று கிளம்பி, பல இடங்களையும் பார்ப்பது போல கோயில்களையும் பார்க்கப் போகிறார்கள்.

கோயில்களும் முன்பு மாதிரி புனிதமான திருத்தலங்களாக இல்லை. பணம் பிடுங்க ஆசைப்படுகிற பிசினஸ் கேந்திரங்கள்