பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 52 'மாட்டேன், எனக்கு தூக்கம் வரலே’ என்று சொல்லி வள்ளி எழுந்து உட்கார்ந்தாள். "உனக்கு தூக்கம் வருதா, தனத்திா?’’ இல்லே.' "அப்பம் ஒரு கதை சொல்லேன்: ' அவர் ஆரம்பித்தார்-செட்டியார் கடையில் வ்டை திருடிய காக்கா கதைதான். "இந்தக் கதை வேண்டாம். இதுதான் எனக்குத் தெரியுமே. அம்மா சொல்லியிருக்கா. அப்பா சொல்லி யாச்சு. நீயும் எத்தனையோ தடவை சொல்லியிருக்கே...” சரி. வேறே கதை சொல்லுதேன்' என்று தலையைச் சொறிந்தார் தாத்தா. 'நீ படுத்துக்கோ. நானும் பக்கத் திலே படுத்துக்கிடுதேன். விளக்கை அணைக்க வேண்டாம்: கொஞ்சமா எரியும்படி சுருக்கி வைக்கலாம், என்ன?’ என்று குழைந்தார். வள்ளி மறுக்கவில்லை. அவரும் அப்படியே செய்தார். படுத்தார். கதை சொல்லலானார். - சித்திரக்குள்ளன் கதை, ஒரு அப்பா அம்மாவுக்கு ஏழு பிள்ளைகள். கடைசிப் பிள்ளை ரொம்பவும் குள்ளம். அதனாலே, சித்திரக் குள் என்னு பேரு. வீட்டிலே ரொம்பவும் கஷ்டம். சோத்துக்கு வழியில்லே. அரை வயிறு, கால் வயிறு சாப்பாடு கூடக் கிடைக்கல்லே. அப்பாவும் அம்மாவும் யோசிச்சாங்க. பிள்ளைகளைக் கூட்டிக்கிட்டுப் போயி. பக்கத்துக் காட்டிலே விட்டுப்போட்டு வந்திரனுன்னு முடிவு பண்ணினாங்க. அவங்க சாத்திரி வேளையிலே இப்படி ரகசியம் பேசியதை, குள்ளன் மட்டும் கவனிச்சுக் கேட்டுக்கிட்டிருந்தரின். மத்த்ப் பிள்ளைகள்ளாம் தூங்கிட்டுது. குள்ளப்பயலுக்கு துர்க்கமே