பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

بحم..چم நல்ல முத்து గ్ర அவளுக்கு அவ்வளவு கோபம் பொங்கி வரும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. 'கண்ணுடிப் பாசியா? எது சாமி பாசிமணி! நீ முத்துமாலேயே பார்த்ததில்லை போலிருக்கு. ஜாதி முத்து இது. இதைப் போயி கண்ணுடி வடம்கிறியே என்று எரித்து விழுந்தாள் அவள். - 'ஏ புள்ளே, எனிப்படி கத்துறே? முத்து மாலைக்கு இவ்வளவு பளபளப்பு எங்கேயிருந்து வந்தது? அவரை மேலே பேசும்படி விடவில்லை. அவள். ஏன் சாமி.இப்படிப் பேசுறே? நல்முத்து பார்த்தாலே தெரியுமே சுண்னு பூத்துப் போச்சுதா உனக்கு? இந்த இதைப் பாரு' என்று அவள் மாலையைக் கழற்றி அவரிடம் பண்ணையார் அதை வாங்கிப் பார்த்தார். கையில் வைத்து உருட்டிப் பார்த்தார். கண்ணருகில் வைத்தும் எட்ட நீட்டியும் பலவிதமாகவும் கண்டு களித்தார். சங் தேகமேயில்லை. ஆணிமுத்து என்பதில் கொஞ்சம் கூடச் சந்தேகமே கிடையாது. அருமையான மாலைதான் என்று பேசியது அவர் மனம். "இது இப்பதான் புதுசாகச் செய்து போட்டதா? என்று கேட்டார். ஒயிலாகத் தலையசைத்து, நாட்டியமாடிய கண்களே மேலும் குதித்தாடச் செய்து, அமைதியென்பதையே அறியாதவள் போல் ஆடியும் அசைந்தும் கின்றுகொண் டே அவள் சொன்னுள்: ஊஹ-ம் இது எனக்குக் கிடைச்சு ஒரு வருஷத்திற்கு மேலே ஆகுது. சிவகிரி ஜமீன்லே நாங்கள் கழைக்கூத்து ஆடிக் காட்டினபோது ஜமீன்தாரு இனமாக் கொடுத்தாரு அதிலேயிருந்து அது என் கழுத்திலேதான் கிடைக்குது.” மங்கவே யில்லையா?"