பக்கம்:வள்ளுவர் உள்ளம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வள்ளுவர் உள்ளம்
விய, தை, முதல் நாளன்று பொன்மலைத் திருக்குறள் கழகத்தில் நடந்த 'தமிழர் திருநாள்' கூட்டத்தில் ஆசிரியர் நிகழ்த்திய சொற்பொழிவு.
தமிழர் திருநாள்

அன்பர்களே! பெரியோர்களே! வணக்கம்.

பொங்கல் திருநாளாகிய இன்றைய தினம், பொன் மலையில், பெரியோர்களாகிய உங்கள் முன்னிலைபில், தமிழர் திருநாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதுகாறும் பொன்மலையில், தமிழர் திருநாள் கொண்டாடியதாக எனக்குத் தெரியவில்லை. இவ்வாண்டு இங்கே தான் தமிழ்நாட்டிலேயே முதன்முதலாகத் தமிழர் திருநாள் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதிலும், திருச்சிராப்பள்ளியிலும்கூட இன்று மாலையில்தான் தமிழர் திருநாள் கொண்டாடப் போகிறார்கள். ஆனால், நீங்கள் காலையிலேயே தொடங்கிவிட்டீர்கள்.

இத்திருநாள் தொடங்கும்போதே நல்ல முறையில் தொடங்கப் பெற்றிருக்கிறது. இவ்வாண்டு, தமிழர் திருநாள் எல்லா இடங்களிலும் கொண்டாடப்பட வேண்டுமென்பது பெரும் புலவர்களும், அரசியல் கட்சியினரும், நல்லறிஞர்களும் கொண்டுள்ள கருத்து.