பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வள்ளவர் கோட்டம்

82

 கவியரசர் முடியரசன்


 வள்ளுவர் கோட்டம்   82  கவியரசர் முடியரசன்

நாடெல்லாம் மெச்சவரும் நற்கலைஞன்; எந்நாளும் வீடெல்லாம் போற்றி வியக்கவரும் நாவலனாம்; பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலித்துக் காட்டுந் திறலுடைய கட்டழகுப் பாவேந்தன், செய்கவெனச் சொல்லி விதித்தான் சிலவற்றைச் செய்யற்க என்றுசில செப்பி விலக்கிவிட்டான்; பாவல்லான் செய்யப் பணித்தவற்றை நாம்விலக்கிப் பூவெல்லாம் வைத்துப் புகழ்பாடிப் போற்றுகின்றோம், மேலோன் வகுத்துரைத்த வேதப் பொருளுணர நூலோன் நமக்களித்தான் நுண்மாண் நுழைபுலத்தை; பெற்ற புலத்தால் பெரியோன் குறளையினிக் கற்றுக் கசடறுத்துக் கற்றவற்றை நெஞ்சிருத்திப் பாட்டைத் தெளிந்துணர்ந்து பாட்டை விலகாமல் நாட்டில் நடைபயில்வோம் நாம்.

                                                 1. 3.70.