பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரத்திற்கு வந்து செல்லும் ஞானியார் அவர்கள் அயர்ந்து உறங்கத் தொடங்கும்போது, அவர் உறங்கும் வரை அவர் கால்களைப் பிடித்துவிடும் பழக்கமுடைய என்னை, ஒருமுறை அவர் தலைமையில் 'மணிவாசகர் அளித்த திருவாசகம்" என்ற தலைப்பில் பேசு மாறு பணித்துவிட்டார்கள். சங்க இலக்கியங்களை ஒரளவு கற்றவனே அல்லது, சமய இலக்கியம் படித்தவன் அல்லன். ஆனாலும் திருக்கோவையாறில் ஒருசில பாக்களைப் பள்ளியில் படித்தவன். என் தந்தையார், மார்கழி மாத விடியற் போதில் படிக்கும் திருவாசகப் பாக்களைக் கேட்டுக் கேட்டுச் சில பாடல்களை நினைவில் வைத்திருப்பவன். அதனால் தன் மகள், அவள் விரும்பும் இளைஞனோடு அவள் சென்றுவிட்ட போது, அவர்களைத் தேடிச்சென்றதாய், எதிரே வந்த ஒர் இள ஆணையும் ஓர் இள மகளையும் அணுகி, உங்களைப் போன்ற இருவர் இவ்வழியில் செல்வதைக் கண்டீர்களா எனக் கேட்க, அதற்கு அந்த இளைஞன், ஒன்று இருவரையும் பார்த்தேன் அல்லது இல்லை என்று கூறியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக ' என்னைப் போன்ற இளைஞரைப் பார்த்தேன்." எனக் கூறிவிட்டுத் தன் பக்கத்தில் நிற்கும் தன் காதலியைப் பார்த்து 'இந்த அம்மா, வேறு யாரோ ஒருவரைப் பற்றி கேட்கிறார்களே! அவர்களைப் பற்றி உனக்குத் தெரியுமா” எனக் கேட்டதாக வரும். " ஆளி அன்னானைக் கண்டேன் அயலே துாண்டா விளக்கனையாய்? என் மாயோ அன்னை சொல்லியதே' என்ற பாட்டைப் பாடிவிட்டு எதிரில் இருவர் வர, ஆணை மட்டும் பார்த்துப் பெண்களைப் பார்க்காத அக்கால இளைஞரின் நாகரீகம் எங்கே? அழகிய இளமகளிரை - எங்கெல்லாம். கா ன ல ம் என அலைபாயும் உள்ளத்தோடு, மகளிர் கல்லூரி வாயில் களிலும், திரையரங்குத் திடல்களிலும் காத்துக் கிடக்கும் 109