பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள்

1. எனக்குள் எழுந்த எழுச்சி!

வெள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் என்ற

ஒரு புத்தகத்தை எழுதுகிறபோது, எனது ஆய்வுக்காக ஆயிரம் முறையாவது, திருக்குறளைப் புரட் டி யிருப்பேன்.

திருக் குறளைப் புரட் டினேன், திருப் பினேன் என்று கூறியதற்குக் காரணம், ஒரு குறளைப் படித்து விட்டு, புத்தகத்தை மூடினால், முன்னர் நினைத்திருந்த பொருள் மாறி, மேலும் ஒரு வகை புது எழுச்சி என்னுள்ளே புகுந்து கொள்ளும்.

அதற்காக, குறட்பாக்களைத் திரும்பத் திரும்பப் படித் தேன். எண்ணத்தால், விரும் பி விரும் பிப் படித்தேன். ஐயங்கள் ததும்பத் ததும்பப் படித்தேன். அதன் பிறகும் ஊன்றிப் படித்தேன்.

ஆமாம்! படிக் குந் தோறும் புதுப் புதுச் சிந்தனைகளில் துடிக்க வைக்கின்ற சக்தி, ஒவ்வொரு