உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கு விழா காக வள்ளுவர் கோட்டத்திற்கு இதைக் கட்டி முடித்து பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 89ஆம் ஆண்டு நான் வந்தேன். பின்னர் இரண்டாண்டு காலத்தில் சில பல நேரங்களில் இங்கே நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். அதற்குப் பிறகு சற்றொப்ப ஏழாண்டு காலத்திற்குப் பின்னர், இன்றைக்கு வள்ளுவர் கோட்டத் திலே உங்களையெல்லாம் காணுகின்ற வாய்ப்பினை நான் பெற்றிருக்கிறேன். இந்த ஏழாண்டுக்குப் பிறகு இப்பொழுது வள்ளுவர் கோட்டம் உண்மையிலேயே வள்ளுவர் கோட்டமாக மாற்றப் பட்டிருக்கின்றது. இடையிலே - நான் வேதனையோடு சொல்லிக் கொள்வேன். வள்ளுவர் யாத்த முப்பாலில் மூன்றாவது பால்தான் வள்ளுவர் கோட்டத்திலே கடந்த ஆட்சியிலே நடைமுறைப் படுத்தப்பட்டது என்பதை - நானல்ல நடுநிலை வார ஏடுகள் ஆதாரப்பூர்வமான புகைப்படங்களோடு வெளியிட்டதை நீங்கள் பார்த்து கண்கலங்கியிருக்கிறீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். - இன்றைக்கு புதிய எழுச்சியோடும் புத்தொளியோடும் வருகை தந்து என்னெதிரே வீற்றிருக்கின்ற உங்களையெல்லாம் காணும்போது நான் மிகுந்த உற்சாகம் பெறுகிறேன். ஊக்கம் பெறுகிறேன்; மகிழ்ச்சியடைகிறேன்; பெருமிதம் கொள்கிறேன். . கே