உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப க கள் வாகஇ க்கப்ப பை

பக பகவு அன்னை வேளாங்கண்ணி ஆலய வெள்ளி விழா ப்ப சரிய ந்த நல்ல மாலை நேரத்தில் இங்கே நடைபெறுவது வெள்ளி விழா நிகழ்ச்சி பற்றி உரைகளா? அல்லது கவியரங்கமா? என்று தெரியாத அளவிற்கு ஒரு திகைப்பு. ஏனென்றால் வரவேற்ற வர்கள், வாழ்த்தியவர்கள், வாழ்த்து மடல் படித்தவர்கள், அடுத்து யார் பேசுவார் என்று சொன்னவர்கள் அத்தனை பேருமே, கவிதை நடையிலே தங்களுடைய பேச்சுக்களை அமைத்துக் கொண்டிருக் கின்றார்கள். நானும் கவியரங்கம் கேட்டு நீண்ட நாளாகிறது எனவே இன்றைக்கு அந்த அரிய வாய்ப்பை அன்னை வேளாங் கண்ணி திருத்தலத்திலே பெற்றிருக்கிறேன். அதற்காக என் நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் சற்றொப்ப 25 ஆண்டுகளுக்கு முன்பு மணியை ஒலிக்கின்ற பணியினை நான் நடத்தியிருக்கிறேன். அந்த மணியோசை மாறாமல், இன்றைக்கும் வெள்ளி விழா நிகழ்ச்சியிலே கலந்து கொள்கிற வாய்ப்பினை நான் பெற்றிருக்கிறேன். தம்பி பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல இந்த 25 ஆண்டுகளில் நான்காவது முறையாக ன் முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறேன் என்றால், என்னுடைய தனிப்பட்ட ஆற்றல், வலிமை என்றெல்லாம் சொல் வதைவிட மேடையிலும், எதிரே அமர்ந்திருக்கின்ற உங்கள் நல்ல நா