உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 வழி மேல் விழி வைத்து... தொகையை தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கே தந்துவிட்டேன். வழங்கியவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தார். திருப்பித் தந்தது அவர்களிடமே! இப்பொழுது நிலைமை அப்படி இல்லை. (பலத்த சிரிப்பு) இன்று காலையில் சிவந்தியின் அண்ணன் ராமச்சந்திர ஆதித்தன் தமிழக அரசின் சார்பில் நடத்தப்படுகின்ற ஏழைப் பெண்களுடைய திருமண உதவித் திட்டம் - மூவலூர் ராமாமிர்தம் அவர்களுடைய பெயரால் வழங்கப்படுகின்ற திட்டத்திற்கு நான் விடுத்த வேண்டுகோளின்படி - பலர் கோடிக்கணக்கில், இலட்சக் கணக்கில் நிதி வழங்கியிருக்கிறார்கள் என்றாலும் காலையிலே ஒரு இலட்சம் ரூபாயை அந்த நிகழ்ச்சியிலே வழங்கினார்கள். ை காலையில் ஒரு நிகழ்ச்சியும், மாலையிலே ஒரு நிகழ்ச்சியும் நடைபெறுவது எவ்வளவு எங்களுக்கு இலாபகரமானது என்பதற்கு (சிரிப்பு) இதைச் சொல்கிறேன். காலையிலே ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டதை நான் முதலமைச்சர் நிவாரண நிதியிலே சேர்த்து ஏழைப் பெண்களின் திருமண நிதிக்கு இது பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்டேன். - ரூ அதைப்போலவே இப்பொழுது சிவந்தி அவர்கள் இந்த விழாவிலே எனக்காக வழங்கியுள்ள ஒரு இலட்சம் ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதியிலே சேர்த்து ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டத்திற்கு வழங்கப்படும் (பலத்த கைதட்டல்) என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிக் கூறிவிட்டதால் சிவந்தியின் கோட்டா முடிந்து விட்டது என்று பொருள் அல்ல (பலத்த சிரிப்பு) கோடிக்கணக்கில் கொடுத்தவர்கள் எல்லாம் எதிரே அமர்ந்திருக்கிறார்கள் என்பது சிவந்திக்கு தெரியும். எனவே ஒரு நல்ல காரியத்திற்குப் பயன் படுகின்ற அளவிற்கு பொற்கிழியும், என்னை மேலும் உற்சாகப் படுத்துகின்ற அளவிற்கு மூதறிஞர் என்ற விருதும் வழங்கியுள்ள -