உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர். மு. கருணாநிதி 19 பத்திற்கு வந்து, வழக்கம் போல அவளைத் தூக்கி விழுங்கிவிட்டு போய்விட்டான். இப்போது எமனின் வயிற்றுக்குள்ளே அந்தப் பெண்; அந்தப் பெண்ணின் வயிற்றுக்குள்ளே அக்னி பகவான். பகல் எல்லாம் அவள் என்ன செய்தாள் என்றால் எமனின் வயிற்றுக்குள்ளேயே அக்னி பகவானை வெளியே துப்பி, இரண்டு பேருமே வயிற்றுக்குள்ளேயே இன்பமாக இருந்தார்கள். இரவிலே எமன் தன் வயிற்றுக்குள்ளிருந்து அவள் வெளியே துப்பி அவ ளோடு இன்பமாக இருக்கிறான். என்ன ஆயிற்றென்றால் உலகத் தில் அக்னியையே காணோம். உலகத்தில் அக்னி இல்லா விட்டால் என்ன ஆகும்? அடுப்பு பற்ற வைக்க முடியவில்லை; தீப்பெட்டி எரியவில்லை. எல்லோரும், முப்பத்தி முக்கோடி தேவர்களும், நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிகளும், கந்தர்வர், கின்னரர், கிம்புருடர், அஷ்டதிக்குப் பாலகர்கள் அத்தனை பேரும் (பலத்த கைதட்டல்) பரமசிவனிடம் போய் அக்னியைக் காணவில்லை என்று முறையிட்டார்கள். 100 பரமசிவன் உடனே வாயுவை அழைத்து, உன் 'ப்ரெண்டு’ தானே அக்னி பகவான்; நாளைக்கு 24 மணிநேரத்திற்குள்ளே அக்னியைக் கொண்டு வர வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கிறார். வாயுவிற்குத் தான் தெரியுமே அக்னி பகவான் எங்கிருக்கின்றான் என்று. அதற்காக என்ன செய்தாரென்றால், (அதற்குள் சுற்றுப்பயணம் சென்ற முனிவர் மாண்டவியரும் அவருடைய மனைவியும் திரும்பிவிட்டார்கள்.) வாயு பகவான் தன் அரண்மனையிலே ஒரு பெரிய விருந்து வைத்தான் எல்லோரும் வந்தார்கள். இலை போடப்பட்டது. வரிசையாக இலை போட்டுக் கொண்டு வரும்போது, வாயு பகவான் எமதர்மனுக்கு நேராக மூன்று இலை போட்டான். எமன் "ஏன் எனக்கு மூன்று இலை?" என்று கோபமாகக் கேட்டான். அதற்கு வாயு எமனைப் பார்த்து 'உன் வயிற்றுக்குள் இருக்கும் பெண்ணை வெளியே அனுப்பு - அதற்காக ஒரு இலை" என்றான். எமன் துப்பினான், அந்தப் பெண் வெளியே வந்துவிட்டாள். "இன்