உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 வழி மேல் விழி வைத்து... வகமாக இந்தப் பொன்விழா ஆண்டில் மாற்றிட இருக்கிறது என்பது மட்டுமல்ல; கட்டபொம்மன் வாரிசுகளுக்கும், மருது பாண்டியர் வாரிசுகளுக்கும், சுந்தரலிங்கம் வாரிசுகளுக்கும் உதவி டுவது போல விசுவநாததாஸ் வாரிசுகளுக்கும் உதவிடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். (கை தட்டல்) சுதந்திர தின வெள்ளி விழா 1972 ஆம் ஆண்டு நான் அறிவித்தது போலவே; இந்தப் பொன்விழா ஆண்டிலும் சிறை வாழ் கைதிகளுக்கு சலுகைகள் சிலவற்றை அறிவிக்கிறேன். பத்தாண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றோருக்கு ஒன்றரை ஆண்டுக் காலத் தண்டனைக் குறைப்பு. இந்தச் சலுகை மூலம் 139 சிறைக் கைதிகள் விடுதலை பெறுவார்கள். BL. பரு ஐந்தாண்டுகளுக்கு மேல் பத்தாண்டுகளுக்குள் தண்டனை பெற்றோருக்கு ஓராண்டு காலம் தண்டனைக் குறைப்பு. இதன் மூலம் 24 கைதிகள் விடுதலை பெறுவார்கள். ப ஓராண்டுக்கு மேல் ஐந்தாண்டுகள் வரை தண்டனை பெற்றோருக்கு நான்கரை மாதம் தண்டனைக் குறைப்பு இதன் வாயிலாக 64 சிறைக் கைதிகள் விடுதலை பெறுவார்கள். மூன்று மாதங்களுக்கு மேல் ஓராண்டு வரை தண்டனை பெற்றோர் பாதிக் காலத்தண்டனை அனுபவித்திருந்தால் மீதிக் காலத் தண்டனை குறைக்கப்பட்டு விடுதலையாவர். இதன் மூலம் த 166 கைதிகள் விடுதலை அடைவார்கள். BLO இதே கைதிகள் பாதிக் காலத் தண்டனை அனுபவிக்காமல் இருந்தால், அவர்களுக்கு மூன்று மாதம் தண்டனைக் குறைப்பு. இந்தச் சலுகை காரணமாக 72 கைதிகள் விடுதலை அடைவார்கள். க ம மூன்று மாதமும் அதற்குக் குறைவாகவும் தண்டனை பெற்றோர் அனைவருமே விடுதலையாவர். இந்த வகையில் 89 சிறைக் கைதிகள் விடுதலை ஆவார்கள். எனவே தற்போது அறிவிக்கப்படும் இந்தச் சலுகைகளின் பலனாக 554 சிறைக் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்படுவ