உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரியங்களைப் போலப் பலமடங்கு அதிகமான காரியங்கள் அவருடைய திறமையின் மூலம் நாட்டுக்குக் கிடைக்க வேண்டி யிருக்கிறது - என்று மனம் திறந்து கருத்தறிவித்தார், அறிஞர் அண்ணா அவர்கள். கலைஞர் அவர்கள் ஆற்றிய இந்தச் சொற்பொழிவுகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பைக் காணும்போது - அனைத்தும் அவர், தான் இத்தனை ஆண்டுகள் கடைப்பிடித்து வரும் கொள்கை வழியிலிருந்து இம்மியும் பாதை மாறாமல், தன்னுடைய அறுபதாண்டு காலப் பொது வாழ்க்கையிலே தான் உன்னதமாகப் போற்றி வரும் பகுத்தறிவு வழி மீது விழி வைத்து பயணம் நடத்துகிறார் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளலாம். . தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் வகுத்த ‘வழிமேல் விழிவைத்து..." தம்முடைய அரசை மிகக் கவனமாக நடத்தி வருகிறார், அது போலவே கழகத்தையும் இயக்கி வருகிறார். எனவே, அவர் வழி நடப்பது தந்தை பெரியார் வழி நடப்பதாகும்; அறிஞர் அண்ணா வழி நடப்பதாகும். ஆகையால், நாமும் அவர் வழி நடப்போம்; கலைஞர் கரத்தை வலுப் படுத்துவோம் - திருமகள் நிலையத்தார். கத்துப் பகதை இ TILOJE ingle காவழம் கு aabe பள் vi