உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 வழி மேல விழி வைத்து... எனவே 52ஆம் ஆண்டு முதல் சுதந்திரம் பெற்ற ஐந்தாவது ஆண்டிலே இந்த நிலைமை இருந்திருக்கிறது. இன்றைக்கு அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும் கூட இடுகாடு, சுடுகாடு என்ற இடங்களில் சாதி, பேத உணர்வு, வேற்றுமை உணர்வு, தாழ்வு மனப்பான்மை, பிளவு மனப்பான்மை இவைகள் எல்லாம் கொடிகட்டிப் பறக்கின்ற காட்சியை நாம் காண்கின்றோம். எல்லோரும் ஒரே குரலில் சொன்னோம். நானும் சொல்கிறேன். இதிலே மனதளவில்தான் மாற்றம் வேண்டும். The La ( TOJ நம்முடைய ஆர்.எம்.வீ. அவர்கள் ஆரம்பித்து தொடர்ந்து பேசிய அனைவரும் மனதளவில்தான் இந்த மாற்றம் ஏற்பட வேண்டுமென்று நாம் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். அதற்கு அம்பேத்கர் இந்த சாதி ஒழிப்புக்கு ஒரு வழி சொல்லியிருக்கிறார். "சாதி ஒழிப்புக்கு உண்மையான வழி கலப்பு திருமணம்தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ரத்த கலப்பின் மூலம்தான் உற்றார், உறவினர் என்ற உணர்வு ஏற்படும். இந்த உறவு, இந்த உணர்வு ஏற்பட்டு வலுவடைந்தாலன்றி சாதியினால் ஏற்பட்டிருக்கும் வேற்றுமையுணர்வு ஒருவருக்கொருவர் அன்னியராக நினைப்பது மறையவே மறையாது. சாதியை உடைப்பதற்கு உண்மையான தீர்வு கலப்புத் திருமணமே. வேறு எதுவும் சாதியை கரைக்க முடியாது.சமபந்தி போஜனமும் கலப்பு மணமும் சாதாரண நடைமுறையாகும் போதுதான் சாதியின் சக்தி அழியும். எனவே நாம் இன்றைக்கு சமபந்தி போஜனம் நடத்தினோமென்றால் அது அம்பேத்கர் அவர்களுடைய வழியில் அவர் சொன்ன அந்தக் கருத்தின்படி நடத்தியிருக்கின்றோம் ய சமபந்தி விருந்து நடத்திவிட்டோம். ஆனால் எத்தனை பேர் கலப்புத் திருமணத்திற்கு தயாராக இருக்கிறோம். ஆனவர்களை கேட்கவில்லை (திருமணம்) இன்னும் ஆகாதவர்களைக் கேட்கின் றேன். ஆனவர்கள் நான் தயார் என்று கையை உயர்த்திவிடா தீர்கள். நான் கேட்பதற்கு உரிமை படைத்தவன். நம்முடைய