பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தையும் பிறந்தது செய்யும் விளைந்தது; தையும் பிறந்தது ; செங்கதிர் கீழ்த்திசை கண்டோம் ! - புதுச் செங்கதிர் கீழ்த்திசை கண்டோம் ! பொய்கை புதர்செடி பூக்கள் நிறைந்தன ; பொன்ைெளி எங்கனுங் கண்டோம் ! - புதுப் பொன்னுெளி எங்கனுங் கண்டோம் ! மாவும் சுளேப்பலா வாழையும் செந்நெலும் வந்து குவிந்தது வீட்டில் ! - தை வந்தது வந்தது நாட்டில் ! கூவும் குயிலினம் கூவாக் குயிலினம் தாவிப் பறந்தது மேல்வான் ! - ஒளி தாவிப் பறந்தது கீழ்வான் ! சிட்டுச் சிறுவரின் செங்கைக் கரும்புகள் தொட்டுப் பிசைந்தன பொங்கல் ! - அதை இட்டு மகிழ்ந்தனர் பெண்கள் ! . வெட்ட வெளியெலாம் மெல்லியர் பண்ணிசை - மேவும் ; சிலம்பொலி கேட்கும் ; - தமிழ் வெற்றி முரசெங்கும் ஆர்க்கும் !