பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(v) அமைவன கூற லன்றி அறிவியல் தன்னை நோக்கிச் சமயத்தின் சிறப்பைச் சாற்றும் சால்புநூல் இதுவொன் றென்பேன். வாசகன் வரைந்த தெய்வ வாசகம் அனைத்தும் ஞான வாசகம் ஒன்று மட்டும் வழிவழிச் செய்தி சொன்னோம் வாசகத்தறிவி யல்கள் . வாசனை வீசு மாறு தேசுரக் காட்டும் இந்தத் தமிழினை உலகம் போற்றும். ஆழ்வார்கள் அருளிப் பாட்டில் அமைந்துள அழகுப் பாட்டில் வீழ்வாரும் உய்யும் தெய்வ விளக்கெனும் வாய்மொ ழிக்குள் ஏழ்கட லுலகை ஈர்க்கும் ஏற்றமார் அறிவி யல்கள் ஊழிழ்த்துவே ரூன்றல் காட்டும் உயர்நூலொன் றிதுவே யன்றோ ? காதலித் திறமை இன்பக் கவினெலாம் கண்டார் செய்தி சீதமார் தமிழில் சிந்தைச் செல்வமாய் விளக்கிச் சொல்லும் மேதகு புகழ்மை யாளர் மிகுதமிழ் சுப்பு ரெட்டி சாதனை வரிக ளெல்லாம் சரித்திர மாக வாழும்.