பாதை
ஆன்றோர் பலர் பல நூல்களுக்கு அணிந்துரைகள் வழங்கியுள்ளனர். அப்படி வழங்கிய அணிந்துரைகளை ஒரே நூலாகத் தொகுத்துக் கவிதை அணிந்துரை நூலாகத் தமிழ் மொழியில் வெளியிட்டு வழிகாட்டியவர் பெரும் புலவர் வே. கி. நாராயணசாமிபிள்ளை அவர்கள்தாம்.
அவர் வெளியிட்ட ஆண்டு 1887.
நானும் பலருடைய நூல்களுக்கு அணிந்துரைகளை வழங்கியுள்ளேன். அவற்றுள் கவிதை அணிந்துரைகளை மட்டும் தொகுத்து இந்த வார்த்தை வாசலை உங்களுக்காக உருவாக்கியுள்ளேன்.
தமிழறிஞர் வே. கி. நாராயணசாமிபிள்ளை அவர்களது அணிந்துரைத் தொகுப்பு நமது நாட்டுக்குப் பயன் தந்துள்ளது.
அதே பயனை இந்த “வார்த்தை வாசலும்” தரும் என்று கருதியே இதனைத் தொகுத்து வெளியிட்டுள்ளேன்.
இந்த வாசலில் உங்களை மகிழ்விக்க மாக் கோலங்கள் மட்டுமே போடப்பட்டுள்ளன; கண்ணும்புக் கோலங்களில்லை.
சிக்கலான கோலங்களில்லை; சிந்தனையைத் தூண்டுகின்ற செறிவான கோலங்களே இங்கு மிளிர்கின்றன.
என்னுடைய “வார்த்தை வாசலில்” நான் போட்டுள்ள இந்தப் புள்ளிக் கோலங்கள் பலருடைய மனத்தைப் பண்படுத்தும், என்று உறுதியாக நம்புகின்றேன்.