பக்கம்:வார்த்தை வாசல்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்விமலர் போன்றவளாம் அழகுப் பெண்னை

ஆசையொடு புத்தகத்தில் ஆட விட்டும்; கல்மலையின் மெல்லியமே லாடை போன்று

காட்சிதரும் அருவியொன்றை ஒட விட்டும்; மல்லிகையைப் பந்தலிலே படர விட்டும்;

மடலேறும் வண்டுகளேப் பாட விட்டும்; நெல்விளேயும் தகட்டுர்வாழ் கவிஞர், செய்யுள்

நிதிநமக்குப் புதிதாக வழங்கி யுள்ளார்.

வனந்தெரிந்த இடத்தில்போய் மேயும் மான

'வற்கலையே” என்றழைக்க வேண்டின்; சொல்வின் இனந்தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். வெய்யோன்

இழைக்கும்நாள்' என்றெழுத நுட்பம் வேண்டும். சினந்தணிந்த செங்கதிரோன் என்று பாடத்

தேன்சங்கப் பாடல்களில் பயிற்சி வேண்டும். மனந் திறந்து சொல்லுகின்றேன், சங்க நூலின்

வழிப்புலமை என்னைப்போல் இவர்க்கு முண்டு.

'விலேமோரில் கடைவதற்கு வெண்ணெய் ஏது?

வெறும்பாட்டில் சுவையேது? வண்ணப் பச்சை இலமாலே மணந்தருமோ? சொல்வீர்? என்றே

எழில்முதல்வன் கேட்கின்ருர். நானும் கேட்பேன். கலையாக்கம் கருத்தாழ மெல்லாம், போவிக்

கவிதைகளில் குடியிருக்க வருவ தில்லை. பலர் போற்றும் புலமையிலான் தொடுக்கும் பாடல்

பகுதியைப்போல் நிலைத்திருக்கப் போவ தில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/8&oldid=645687" இலிருந்து மீள்விக்கப்பட்டது