உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வால்டையரின் சரிதம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

30 செயல்களில் கவனமும் செலுத்தித்தான் வந்தார். மற் றும் அதேகாலத்தில் வால்டையர் ரசாயன சாஸ்திர உண் மைகளையும் தத்துவ சாஸ்திரிகளின் கொள்கைகளையும் கவனித்துக் கற்றுக்கொண்டேதான் வந்தார். ஆனால் இவ்வளவு வேலைகளுக்கிடையிலும் மூடப் பழக்கமென் னும் முரட்டு அரக்கனைத் தாக்குதலில் மட்டும் தன் ஞா பகத்தை மறவாமல் நிலை நிறுத்திவந்தார். விழிப்பிலும் தூக்கத்திலும் கோயிலை அவர் வெறுத்தே வந்தார். மை கொட்டாத நாட்டத்துடன் கவனித்தும் இரக்க வில்லா அரக்கனைப்போல் தாக்கியும் வந்தார், ஒரு மனி தனையும் சார்ந்து நிற்காமல் தனிப்படையாக நின்று, வெட்டவெளியான யுத்தகளத்திலும் சமயம் ஆகிய வே லிக்குப் பின்னுமாகச் சுமார் அறுபது ஆண்டுகள் வால் டையர் தமது போரை நடத்திவந்தார். அவரது வெற் றியே மிகவும் உசிதமானதாகும். அவர் ஒரு அரசனைப் போல் வா வாழ்ந்து வந்தார். ஐரோப்பாவிலேயே ஆற்றல் மிக்கவருள் ஒருவராய்த் திகழ்ந்ததன்னியில் இலக்கியத் திற்கே அவர் மூலம்தான் முதன் முதலில் முடிசூட்டப் பட்டது. கிறிஸ்துவர்கள் வால்டையர்மீது குறை கூறுவதற் குள்ள காரணங்களில் சில என்னவென்றால்; அவர் பய யக்தியற்றவர் என்பதும், தெய்வீகத் தன்மை பொருந் திய விஷயங்களைத் தக்க சாந்தியோடு விசா ரணை செய்வதில்லை என்பதும், 'அவர் எரிப்புதர்' (Burn- ing Bush) முன்னர் தன் காலணியைக் கழற்ற மறுப்ப தும், மோசசினுடைய லோக சாஸ்திரத்தைக்கண்டும் ஜோ ஷுவாவின் வான நூல் ஞானத்தைக்கண்டும், ஜோனா