உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வால்டையரின் சரிதம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

33 முப்பது, நாற்பது அருங்குழவிகள், சொட்டைத் தலைச் சாமியார் ஒருவரைப் பார்த்து நகைத்தன என்னும் குற்றத்திற்காக அவர்களைத் துண்டு துண்டாய்க் கிழித் தெறிய இரண்டு கரடிகளை ஏவினார். கருணை ததும்பும் ஓர் கடவுள் என்று நம்பும் கசடர்களுடன் தற்கமுறை கையாண்டால் விளையும் பயன் என்னே? கூ இத்தகைய மாக்களுக்குப் பதில் இயம்புவது தான் எப்படி? தங்கள் மோசமான நிலையை அவர்களுக்கு உணர்த்துதல் எவ்வாறு? கேலிக் கூற்றின் கூறிய அம்பு கள் அவர்களது உடற்றசையில் தைத்தால் ஒழிய அவர் களுக்குச் சுய அறிவே ஏற்படாது. இவ்வாறு வால்டையர் சிந்தித்ததற்காக அவரைக் கேலிக்காரன் எனக் குறை கூறினர். அவர் எவற்றை யெல்லாம் கேலி செய்தார் ? தன் குடிகளின் வருத்தத் தைச் சட்டைபண்ணாதும், தன் ஆட்சி முறையில் நீதியில் லாமலும் வந்த மன்னர்கள் தமை, அவர் கேலி செய்தார். பட்டம் பெற்ற முட்டாள்களைப் பார்த்துப் பார்த்து அவர் சிரித்ததுண்டு. நீதிஸ்தலங்களின் அழுக்குத் தன்மை களையும், அநீதியையும், நீதிபதிகளின் இழி தன்மையை யும், கொடுங்கோன்மையையும், கொடூரங்களையும் அவர் கண்டு கோபச்சிரிப்பு கொண்டதுண்டு. ஆபாசமான கொடூரச் சட்டங்களையும், அநாகரீகப் பழக்க வழக்கங் களையும் அகற்றும் விதத்தான் நகைத்ததுண்டு அவ் வால்டையர். கார்டினல்களையும், போப்பையும், பிஷப்பு களையும், புரோகிதர்களையும், கணக்கில்லாத மற்ற ஆஷா டபூதிகளையும் கண்டு அவர் நகைத்ததுண்டு. F-3. தமது