உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வால்டையரின் சரிதம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

35 கக் காணும் சம்பவங்களையும் அவர் நன்கறிந்திருந்தனர். ஆகையால் அவர் தன்காலத்தில் மக்களிடம் காணப்பட்ட விபரீத, வேறுபட்ட மனக் காட்சியைக்கண்டு நகைத் தார். ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குப் பல் அதி கம் என அரிஸ்டாட்டில் என்பவர் கூறியிருந்தார். இதே கொள்கையைப் பதினெட்டாம் நூற்றாண்டு முழுவதும் இருந்த விஞ்ஞானிகள் திருப்பித் திருப்பிக் கூறிக்கொண் டே வந்தனர். ஆனால் வால்டையர் பெண்களின் பல் வரிசையை எண்ணிப் பார்த்து அக்கூற்று பொய்யென உணர்ந்தார். ஏனைய மக்கள் “அவ்வாறு சொல்லப்படு கிறது" என்று திருப்திப் பட்டு வந்தனர். அநேக ஆண் டுகளாய் வால்டையர் தன் சுற்றுப் புரங்களின் நிலைமை யும், உலகமுழுதும் உலவி வந்த கொடுங்கோன்மையும், கொடூரமும் அவர் மனத்தை கவலையுறச் செய்யினும், கட வுள் நம்பிக்கை கொண்டவராகத் தான் இருந்து வந்தார். “இயற்கை மதம்" என்பதில் அவருக்கு நம்பிக்கையுண்டு. தன் காலத்திய மதம் அவரது “கடவுளுக்கு மானபங் கம் உண்டுபண்ணும் தன்மையதாய் இருந்த காரணத்து கட தால் அதை அவர் தாக்கிவந்தார். அவருடைய வுள் தந்தையின் தயை, நீதியின் உறையுள், அறிவு இர க்கம், என்பவை போன்ற நற்குணங்கள் நிறையப் பெற்றி ருக்க, கத்தோலிக்கரது "கடவுள்" கொடுமையும், மட மையும் கொண்ட குரூர அரக்கனாக இருந்து வந்தது. தனது வசமிருந்த ஆயுதங்கள் அனைத்தையும் கொண்டு அவர் "பைபிளை”த் தாக்கிவந்தரர். அதனுடைய பூலோக சாஸ்திரத்தையும், வான சாஸ்திரத்தையும், நீதித் தன் மையையும், சட்டங்களையும், பழக்கங்களையும் அதனு டைய ஆபாசமான பயனற்ற அற்புதங்களையும், அறிவற்ற