________________
38 வால்டையர் தனது அரிய வாழ்வின் பெரும்பாகத் தை நலிவுறுத்தப்பட்டவருக்கு நல்லுதவி புரிவதிலும், அனாதைகளுக்கு அபயம் அளிப்பதிலும், குரூரத்தீர்ப்பு களை அகற்றுவதிலும், அப்பாவிகளையெல்லாம் பாதுகாப் பதிலும், பிரான்சு தேசச் சட்டங்களைச் சீர் திருத்துவதி லும், சித்திரவதைக் கொடுமைகளைச் சிதைத்தெறிந்து விடுவதிலும், புரோகிதரது உள்ளத்தைச் சாந்தப்படுத் துவதிலும், நீதிபதிகளுக்கு அறிவூட்டுவதிலும், நிலமன் னர் தமக்குக் கல்வியளிப்பதிலும், தேச மக்களை நாகரீகப் படுத்துவதிலும், மக்கள் மனத்தினின்று போர் வேட்கை யைப் போக்குவதிலுமே கழித்துவந்தார். நான் அளவுக்கு மீறிக்கூறிவிட்டதாக நீங்கள் நினை க்கலாம். இவரை ஆகாய அளவிற்குப் புகழ்ந்துவிட் டேன் எனவும் நீங்கள் கருதலாம், ஆனால் ஜர்மனி தேச த்து மகான் கீதே (Gcothe) என்பவர் இவரைப்பற்றிக் கூறியதாவது: "நீங்கள் உலத்திலே காணவேண்டுவது, ஆழ்ந்த கருத்தும், அளவுகடந்த பேரறிவும், சிந்தனை சீறும், நல்லுணர்ச்சியும், செரிந்த பகுத்தறிவும், பொ ருளை அறிந்துணரும் தன்மையும், மேம்பட்ட எண்ண மும், மேலான தத்துவமும், தானே இயற்றும் சக்தியும், தண்ணளியின் இயற்கை அறிவும், புத்திசாலித்தனமும் பூரிக்கும் புந்தியும், உண்மை நாடும் உணர்வும், ஒவ் வொரு பொருளையும் அனுசரித்தலும், கலையின் எழிலும், குறி கொண்ட கூற்றும், மிகப்பல விஷயங்களும், வேறு பட்ட பல விஷயங்களும், மாண்பின் அன்பும், மனத்தி னது செழிப்பும், சீரும் சிறப்பும், வாஞ்சையும், மனவள னும், பல பொருளைக் கொள்ளத்தகும் மனோபலனும், விரி