உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வால்டையரின் சரிதம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

44 ஆறாவது அத்தியாயம். டூலூஸ் என்பது ஓர் விசேஷமான ஸ்தலம். பண்டைய பிரசாதங்கள் மலிந்த நகரம் அது. அந்நகர மக்கள் மரப் பாங்குச்சியின் மடமையை உடையவர்களாயிருந்தார்கள் எனினும், அவர்களிடம் காலஞ் சென்ற ஏழு நாயன்மார் களின் உலர்ந்த சரீரங்களும், ஹீராடு என்பவர் வெட் டிய குழவிகளின் எலும்புத்துண்டுகளும், கன்னிமேரி அணிந்திருந்த கவின்தரு ஆடையின் ஒரு பகுதியும், மடமை முற்றிய மதியீனர்களாகிய பல நாயன்மார்களின் மண்டையோடுகளும், எலும்புக் கூடுகளும் ஆன பல பொக்கிஷங்கள் நிறையப்பெற்றிருந்தன. இந் நகரத்தில் அதன் மக்கள் வருடந்தோறும் இர ண்டு விழாக்கள் இன்புற நடத்திவந்தனர்.அவையாவன:- ஹ்யூஜினாட் என்னும் புராட்டெஸ்டாண்டர்களை நாட்டை விட்டுத் துரத்திய விழாவொன்றும் பர்த்லாம்யூ நாளில் அவர்களைக் கொலை செய்த விழாவொன்றும் ஆகும். இவ் விரு விழாவையும் மகிழ்வுடன் கொண்டாட அந்த டூலூஸ் நகர மக்களை மதமானது கட்டாயப்படுத்தியும் அறிவுறுத்தியும் வந்தது. இந்த நரிக்கூட்டங்களுக்கும், புலி கோஷ்டிகட்கும் மத்தியில் ஒருசில புராட்டஸ்டெண்டு மதமக்கள் ஒருசில ரேயாகையால் சற்று சமாதானமாய்க் குடியிருந்து வந் தனர். இத்தகைய புராட்டஸ்டெண்டுகளுள் ஜீன் கலாஸ் என்னும் சிறு வியாபாரி ஒருவனிருந்தான். அவன் யா தொரு பாவமும் அறியாத நற்குணத்தவனாய் நாற்பது