________________
50 உடல் மிதந்து கொண்டிருந்தது. உடனே அவளது பெற்றோர்கள்தான் அவள் கத்தோலிக்க மார்க்கத்தைத் தழுவாமலிருக்கும் பொருட்டு அவளைக் கொலை செய்து விட்டனர் என்னும் பொய்க் கூக்குரல் எழுப்பப்பட்டது, மேலே கூறிய ஜீன் கலாஸ் சிறைச்சாலையிலிருக்கும் சமயத்தில் தான் இச்சம்பவம் டூலூஸ் நகரத்திற்குச் என்பவனு சற்று தூரத்தில் நடந்து வந்தது. சீர்வன் க்கு விசாரணையானது தண்டனையில் தான் முடியும் என்று நன்கு தெரிந்தது. எனவே அவர்கள் ஊரை விட்டு ஓட்டம் பிடித்தனர். எனினும் அவர்கள்மீது குற்றஞ் சாட்டப்பட்டு முடிவு கூறப்பட்டது. அவர் களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கொலை ஞர்கள் கையால் பெற்றோர்கள் இறக்கவேண்டுமெனவும், அக்காட்சியை இரு புதல்விகளும் கண்டிருந்து அதன் பின்னர் அவ்விருவரும் நாடு கடத்தப்பட வேண்டுமென வும் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் ஓடின காலமோ குளிர்காலம். கலியாண மாயிருந்த ஓர் புதல்வி ஆல்ப்ஸ் மலைப் பனிக் கட்டிகளின் மத்தியில் ஓர் குழவியை ஈன்றாள். அக்குளிரின் அதிக த்தால் அவள் இறந்துபட்டாள். பின் ஸ்விட்ஜர்லாந்து சென்றதும் தகப்பன் முதலியவர்கள் உண்பதற்கின் றித் தவித்தனர். அவர்கள் வால்டையரிடம் சென்றனர். அவர் அவ ர்களது கக்ஷியை தம்மேற் கொண்டார். அவர்களுக்கு. உணவு உடை, முதலியன தந்து அவர்களைக் காப்பாற்றி