________________
58 வின் ன் மோக்ஷம் என்பதைப் பற்றிக் கவலைப் பட்டதே இல்லை மத விஷயமான தர்க்கங்களைக் கண்டு அவர் ககைத்தார். கொள்கைகளையும் கேட்டு பரிதபித்தார். மத வெறியாளர் நடத்தையைப் பார்த்து வெறுத்தார். எனவே அவர் மதாச்சாரியினும் மகாப் பெரியவராயிருக் தார். அவர் காலத்திய கிறிஸ்துவர்களுள் பலர் தமது மதத்தை தினசரி உபயோகத்திற்காகக் கொண்டிருக்க வில்லை கப்பல்களில் ஆபத்துக் காலத்தில் உபயோகிக் கத் தாங்கிச் செல்லும் சிறிய காப்புத் தோணிகளைப் போல, ஆபத்தும், துன்பமும் நேர்ந்த காலங்களில் உப யோகிக்கவே மதமும் அவர்களிடம் இருந்தது. என் மானுஷீகமென்னும் மதத்திலும் நல்ல அருளுடைய செயல்களிலுமே வால்டையர் நம்பிக்கையுடையவரா விருந்தார். பால் நூற்றாண்டுகளாகப் புண்ணியம் வதை மதமானது மிகக் குரூரமாகவும், வெறுக்கத்தக்க வாறும் காட்டிவந்த காரணத்தால் பாவமுங் கூட அழகு எனக் கூறும்படியாயிருந்தது. எனவே வால்டையர் உபயோகப்படும் பொருள்களின் எழிலையும். மூடக்கொள் கைகளின் வெறுப்புத் தன்மையையும் மக்களுக்கு விளக் கிக் காட்டினார். வால்டையர் புலவர்களுள்ளாகிலும், நாடகாசிரியர் களுள்ளாகிலும் மிகப் பெரியவர் அல்லர் என்பது உண் மையே. ஆனால் அவர் தன் காலத்தில் மிகப் பெரிய மனிதரேயாவர். அவர் சுதந்திரத்தின் சுத்தமான தோழர், மூட நம்பிக்கையின் மூர்க்கமான பகைவர் ஆவார்.