பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109


நல்ல பலன்களைத் தரும் எந்த காரியங்களையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை. அதனல் தான், எங்கு சென்றிலும் வெற்றியையும், எதிர்க்க வொண்ணு புகழையும், விரிந்த ாம்ராஜ்யத்தையும் அவர்களால் படைக்க முடிந்தது. அதற்கு அடிப்படையாக அமைந்த ஆடுகளங்களை அந்நாட்டினர். நாடெங்கும் அமைத்தனர். விரிவுபடுத்தினர். விதிகளே சமைத்தனர். நடைமுறையில் ஏற்றுச் சிறப்புற காட்டினர். மதித்துப் பாராட்டினர். மனமார நடந்தும் காட்டினர். போரிடும் இடத்தினை போர்க்களம் என்று அழைக் கிருேம். கதிரடித்து நெல்மணிகளைக் குவிக்கும் இடத்தினை கெற்களம் என்று அழைக்கி ருேம். அது ோல வே விளையாடி மகிழி உதவும் இடத்தினை பும் ஆடுகளம் என்று புதுப் பெயர் தந்து அழைக்கிருேம். ஆடுகளம் என்பது வெறுமையாக விரிந்து கிடக்கும் பரந்த திடல் அல்ல. அது விளக்க முடி காத வரலாற்று நிகழ்ச்சிகளை விளக்கும் பண்புள்ள பூமியாகும். ஆடுகளம் என்பது எதிர்கால சமுதாயத்தை உருவாக் கும் ஏற்ற மிகு இடம். அங்கேதான் சமூகப் பழக்க வழக் களின் நன்னெறிக் கொள்கைகள் மற்றும் நல்வாழ்வு வழிகள் எல்லாம் வளர்ச்சி பெறும் இடமாகவும் அமைந்திருக் கின்றன. அத்துடன் உடல் வளம் காக்கும் உயர்ந்த செயல் களும் நடைபெறுகின்றன! என்கிருர் எலிசபத் ஒநெயில் எனும் மேல் நாட்-நிஞர். ஆமாம். ஆடுகளத்தின் பெருமையை எழுத்தினுல் விளக்குவது என்பது எளிதல்ல.