பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்

29


கொண்டிருந்தார். அத் தொழில் மூலமே அவருக்கு நிறையப் பணம் கிடைத்து வந்ததது. கெய்ஸர் அவருக்கு ஒரே மகன். அக்காரணத்தால் மிகவும் செல்லமாகவே வளர்ந்தார்.

கெய்ஸருக்குப் இளமையிலிருந்தே அளவற்ற ஆசையும், எதிலும் சலிப்பின்றியுமிருந்தார். பதினாறு வயதுவரை பள்ளியில் படித்தார். பிறகு நியூயார்க்கில் உள்ள ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு, சாமான்களை வீடுகளுக்குக் கொண்டு கொடுக்கும் வேலை அவருக்கு அளிக்கப் பட்டது. கெய்ஸர் பகல் வேளைகளில் அலுவலகத்தில் வேலை செய்துகொண்டே இரவு வேளைகளில் போட்டோத் தொழிலைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்தார் போட்டோ தொழிலில் ஒருவாறு முன்னேறிய பிறகு கெய்ஸர் மனதில் ஒரு புது யோசனை உதித்தது. பூந்தோட்டம், நீர்வீழ்ச்சி, பெரிய அழகான கட்டிடங்கள் முதலியவற்றைப் படம் பிடித்து பல மாதிரிகளில் விற்றால் என்ன என்று யோசித்தார். உடனே அதைச் செய்ய முற்பட்டார். அவருடைய முயற்சிக்கு ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பு ஏற்பட்டது. இதைக் கண்டு, கெய்ஸர் மனம் அளவற்ற குதூகலத்தில் மூழ்கியது. போட்டோ தொழிலிலேயே பூரணமாக ஈடுபட எண்ணி கம்பெனி வேலையை விட்டு விலகினார்.