பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



16
கப்பலில் வேலை செய்தவர்
கதை எழுதினார்


மூன்றே மாதங்கள் பள்ளிக்குச் சென்ற ஒருவர் பிற்காலத்தில் 51 புத்தகங்கள் எழுதினார் என்றால் நம்புவீர்களா? ஆனால், இது கற்பனை இல்லை. ஜாக்லண்டன் என்பவர் தம்முடைய 19 வயதில் தான் பள்ளிக்கூடத்திற்கே படிக்கச்சென்றார். சுமார் நான்கு வருஷங்கள் படிக்கவேண்டிய பாடங்களை எல்லாம் இரவு பகலாக மூன்றே மாதங்களில் படித்து பரீட்சையிலும் தேறினார். அதன் பிறகு தான் அவர் நாவல் சிறுகதை முதலியவை எழுத ஆரம்பித்தார். 18 வருஷங்களில் அவர் 51 நாவல்களும், எண்ணற்ற சிறுகதைகளும் எழுதியிருக்கிறார்.

ஜாக் லண்டன் சிறு வயதிலேயே பள்ளிக்குப் போகாததற்குக் காரணம் அவருடைய குடும்பம் வறுமையில் இருந்ததுதான். குடும்பம் வறுமையால் கஷ்டப்பட்டதால் ஜாக்லண்டன் படிக்காமல் சம்பாதிக்க வேண்டியதாயிற்று.