பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ö2 நாடுகளுக்கிடையே எழும் பெரும் சிக்கல்களை, கொலைக்க்ருவிகளைக் கொண்டே முடிவு செய்யும் மறப் போக்கு உள்ளவரை, இந்தியாவும் தனது படைப்பலத்தைப் பலவகையிலும் போதிய அளவு பெருக்கிக் கொள்ளுதல் இன்றியமையாதது. எனவே, தொலை நோக்குடைய பாரதி штff, - ஆயுதம் செய்வோம்’ என்று உறுதி கூறுகிரு.ர். "ஞாலம் கடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்' என்று இந்தியாவிற்கு வழி காட்டுகிரு.ர். படை எண்ணிக்கையால் பெருத்தாலும், பயிற்சியில் சிறந்தாலும், கருவிகளில் முன்னின்ருலும், ஒற்றுமையில் தாழ்ந்தால், வீழும். கட்டுப்பாடே உயிர் நாடி. இந்தியப் படைதன்பதே கட்டுப்பாட்டிற்கு வேர். இந்தியர் என்னும் உணர்வு பட்டுப்போனல், கட்டுப் பாடு குலையும். ஒற்றுமை வளர்க்கும் வகையில், 'சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்த மென்போம்" என்று பாரதியார் பாடியிருப்பதை, மனத்தில் நிறுத்து வோமோ? இதை, செந்தமிழ் நாடென்னும் பாட்டில் சேர்க்கா மல், பாரத தேசம்’ என்னும் பாட்டில் சேர்த்திருப்பது, ஆழ்ந்த பொருளுடையதாகும். முற்காலத்தில் வைசூரி இந்தியாவை அடுத்தடுத்து வாட்டிய பொல்லாத நோய். காலம் காலமாக வந்த அதை ஒழித்துக் கட்டியதுபோல, மனநோயான தொடர் நோயான, சாதி வேற்றுமை என்னும் கொடிய உணர்வு நோயையும் ஒழிக்க, உறுதிகொள்வோமாக! 2」ら らい ?24 l