பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழமைகளில் அவள் ஞாயிறு

'அன்று ஞாயிற்றுக்கிழமை...... கமலா ஆவி பறக்கும் காபியுடன் என்னை எழுப்பினாள்' என்று தொடங்கும் மத்தியதர வர்க்கத்துக் கணவன்-மனைவி கதைகள் நம்வார இதழ்களில் வாடிக்கையாக வெளிவந்த காலத்தை ஒருமுறை ஜெயகாந்தன் சிறுகதை வளர்ச்சி பற்றிப் பேசும்போது குறிப்பிட்டார்.

கதைகளில் - இலக்கியங்களில் இடம் பெறும் அந்தஸ்து ஞாயிற்றுக் கிழமைக்குக் கிடைக்கிறதென்றால் அதற்குக் காரணம், பிறந்த வீட்டுச் சீதனங்களோடு வரும் மருமகள் போல் அது விடுமுறையோடு வருவதுதான்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பது வெள்ளையர் ஆட்சி நமக்கு விட்டுப் போயுள்ள மிச்ச மீதிகளுள் ஒன்று.