பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

விஜயலக்ஷ்மி பண்டிட்



ரும் தாராளமாக ஆமோதித்து we என்று வேடிக்கையாகப் பேசிஞர் ரஞ்சித்.

இவ்வித இனிய சுபாவம் பெற்ற ரஞ்சித் விஜய லஜ்மியின் உள்ளம் கவர்ந்த நாதனாக வாய்த்ததில் அதியம் இல்லைதான்.

ரஞ்சித்கல்கத்தாவில் பாரிஸ்டராகச் செயலாற்றிவந்தார்.சமஸ்கிருத மொழியில் தேர்ந்த ஞானம் பெற்ற அவர் இசை வல்லுநர்.நற்பண்புகளின் உருவம்.

அவருக்கும் விஜயலக்ஷ்மிக்கும் 1931 மே பத்தாம் நாள் திருமணம் நடைபெற்றது.அலகாபாத்தில் ஆனந்த பவனத்தில் தான் கலியாண விழா.

மணவிழாவுக்கு காந்திஜி அலி சகோதரர்கள் முத வியவர்கள் விஜயம் செய்வதாகத் தெரிந்ததும், உள்ளூர்காங்கிரஸ்வாதிகள் சக்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொள்ளத் துணிந்தனர். பெரிய பெரிய தலைவர்கள் கலந்து கொள்ளும் விதத்தில் சிறந்த முறையில் ஜில்லா காங்கிரஸ் மாநாட்டை அலகாபாத் தில் கூட்ட ஏற்பாடு செய்திருந்தார்கள்.இந்த விளம்பரத்தினால் அக்கம் பக்கத்தில் உள்ள விவசாயிகள் ஆயிரக்கணக்கில் வந்துகுழுமுவது சாத்தியமாயிற்று.

நேரு வீட்டுக் கவியான ஆர்ப்பாட்டமும் காங்கி ரஸ் மகாகாட்டின் ஆரவாரமும் சேர்ந்து அலகாபாத் நகரமே அமர்க்களப்பட்டது. இவற்றால் அங்கு வாழ்ந்த ஆங்கிலேயர் கதிகலங்கிப் போனர்கள். திடீரென்று ஒரு