சிந்தனையின் கேள்வி 'ஒளி பிறக்கட்இம் என் மூர் கர்த்தர். ஒளி பிறந்தது! இது விவிலிய வாக்கு. உலகத்திலே-இருளும் சூன்யமும் மண்டிக் கிடந்த வெளியிலே - ஒளி பிறந்தது, உயிர் பிறக்தது, எல்லாம் பிறக்தன என்று பட்டியல் தீட்ட வகை செய்த ஆரம்ப காலத் தில் வாழ்ந்த முதல் மனிதப் பிராணிகள் (அலன் ஆதாமாகவும் அவள் ஏவாளாகவும் இருக்கட்டும் அல்லது, பகவனும் ஆகியுமாக இருக்துவிட்டுப் போகட்டும் ... அல்லது, எவனே ஒரு அவன், எவளோ ஒரு அவள்’ என்றே இருக்கட்டும்!) வாழ்வின் கடுமையை தாங்க முடியாத வேளைகளில்இன்பம் வறண்ட வேளைகளில்- உலகம் கெட்டுப் போச்சு!! எ ன் று நெடுமூச்செறிந்திருப்பார்கள் என்பது உறுதி. இன்று கூட. சிருஷ்டி தொடக்கி பல ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொ?லந்த பிறகும் கூட மனிதகுலம் அறிவுப் பாதையில், எவ்வளவோ முன்னேறி, சாகரிகம் கலாசாரம் பண்பாடு முதலியன மிக வளர்ந்தோங்கி விட்டன என்ற பெரும்ை நிலவுகிற போது கூட, சாம் அடிக்கடி கேட்க