11
149. இரண்டு தோட்டத்துக்கு நான்கு வேலி,
பூ பூத்ததோ தோட்டம் பாழ்.
150. கடல் நீரில் வளர்வேன்; மழை நீரில் மடிவேன்.
151. மாட மாளிகையில் வசிப்பான்; மன்னவனும் அல்ல.
கூட கோபுரத்தில் வசிப்பான்; கொற்றவனும் அல்ல.
152. கரை உண்டு; படிக்கட்டு இல்லை.
தலைப்பு உண்டு; கட்டுரை இல்லை.
153. அண்ணன் வீட்டில் தம்பி போகலாம்;
தம்பி வீட்டில் அண்ணன் போக முடியாது.
154. உரசினால் போதும்; உயிர் முடிந்து போகும்.
155. இறக்கை இல்லாத குருவிக்கு
இரும்பிலே மூக்கு.
பாய்ந்து செல்லும் குருவிக்குப்
பஞ்சிலே வால்.
156. ஆனைக்கும் குதிரைக்கும்
அண்டாத தண்ணீர்.
தொண்டைமான் குதிரைக்குத்
தொடையளவு தண்ணீர்.
157. பூவில் பிறக்கும் - அது வாயில் சுவைக்கும்.
158. மத்தால் அடித்து, பத்துப்பேர் பிடித்து,
பதமாய் எடுப்பது எது?
159. கையில் பந்தாடும்; கதிரவனுடன் போராடும்.
கனலுக்கு இரையாகும்; கரிசாம்பல் பொடியாகும்.
160. கால் நான்கு; நடக்காது;
கண் ஆயிரம்; இமைக்காது.
161. உச்சியிலே குடுமி உண்டு; மனிதனல்ல.
உருண்டையான வடிவம் உண்டு; முட்டையல்ல.
நீர்ததும்பி நிறைந்திருக்கும்; குளமும் அல்ல.
நெற்றியிலே கண் இருக்கும்; சிவனும் அல்ல.
162. ஆயாள் வீட்டுத் தோட்டத்திலே
பச்சைப் பாம்பு தொங்குது.
163. மஞ்சப் பெட்டி, மரக்காப் பெட்டி,
ஒருநாளும் திறக்காப் பெட்டி.