15
206. அறுசுவை உணவுடன் இலையிலே சோறு.
இலையை எறிந்துவிட்டு இலையிலே சாப்பிட
207. ஒரு மரம்; அதில் பன்னிரண்டு கிளை;
ஒவ்வொரு கிளையிலும் முப்பது இலை;
முப்பது இலையிலும் பாதி வெள்ளை;
பாதி கறுப்பு.
208. உயிர் இல்லாத நீதிபதி
ஒழுங்காக நியாயம் சொல்வார்.
209. மனிதன் போடாத பந்தலில்,
மலர்ந்து கிடக்கும் பூக்கள்.
210. பொழுது விடிந்தால் நல்லது என்றது ஒன்று:
விடிய வேண்டாம் என்றது மற்றொன்று;
விடிந்தால் என்ன, விடியாவிட்டால் என்ன,
என்றது இன்னொன்று.
211. அவன் இல்லையேல் அவனியில் ஒன்றுமில்லை.
அவனை நிரப்பலாம்; பிடிக்க முடியாது.
உணரலாம்; காண முடியாது.
212. பாதாளத்தில் பிறந்தவன்;
பம்பரத்தில் சுழன்றவன்;
வெய்யிலில் காய்ந்தவன் -
எல்லோர் வீட்டிலும் இருப்பவன்.
213. ஒட்டை வாயனுக்கு
விழுந்தபல் முளைக்கவில்லை.
214. ஒரு பெண்ணுக்கு மூன்று கொண்டை.
215. உடல் உண்டு, தலை இல்லை.
கை உண்டு, கால் இல்லை.
அல்லும் பகலும் ஒடும்; அது என்ன?
216. கறுப்புச் சட்டை போட்டவன்;
கபடம் அதிகம் உள்ளவன்;
கூவி அழைத்தால் வந்திடுவான் - தன்
கூட்டம் முழுதும் சேர்த்திடுவான்.