19
260. கொத்தரோ தச்சரோ கட்டாத கோபுரம்;
சின்னதாயிருக்கும் சித்திரக் கோபுரம்.
261. எட்டுக்கால் ஊன்றி, இருகால் படமெடுத்து,
வட்டக் குடை பிடித்து வருகிருர் துரை மகனார்.
262. ஒற்றைக் கண்ணன்; ஒற்றைக்காலன்,
ஒடி ஒடி வேலி அடைக்கிறான்.
263. இலையுண்டு; கிளையில்லை.
பூ உண்டு; மணமில்லை,
காய் உண்டு; விதையில்லை.
பட்டை உண்டு; கட்டை இல்லை.
கன்று உண்டு; பசு இல்லை.
264. உள்ளுர் மணியக்காரருக்கு
உள்ளங்கை ஒட்டை.
265. ஆற்று மணலை அள்ளித் தின்போம்;
நாங்கள் ஒரு சாதி,
வெள்ளைக் கல்லை உடைத்துத் தின்போம்;
நாங்கள் ஒரு சாதி.
ஒனானை உரித்துத் தின்போம்;
நாங்கள் ஒரு சாதி.
266. அந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும்.
267. ஊசி போல் இலையிருக்கும்;
ருத்ராட்சம் போல் காய்காய்க்கும்.
268. பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது.
269. அடர்ந்த காட்டின் நடுவிலே ஒரு பாதை.
270. இதயம் போல் துடிப்பிருக்கும்.
இரவு பகல் விழித்திருக்கும்.
271. நிலத்திலும் இருப்பான்; நீரிலும் இருப்பான்.
வாலோடு பிறப்பான்; வாலை இழப்பான்.
கை முளைக்கும்; கால் முளைக்கும்.
கத்தலும் தத்தலும் அதிகரிக்கும்.