உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைக்கிளர்ச்சி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 மு. கருணாநிதி விடுதலைச் சேனையினர் விபரம் தெரிந்தவர்கள், விளக்கம் புரிந்தவர்கள். ஒவ்வொருவரும் விவேக சிந்தாமணிகள். எய்தவனிருக்க அம்பை நோவானேன் என்ற உண்மையைப் புரிந்தவர்கள். ஆதிக்க சக்திகள் எப்போதுமே தன் தர்பார் குறைவற நடைபெற பல காவலர்களை வைத்துக் கொண்டிருக்கும். அந்தக் காவலர் அம்புபோன்றவர்கள்கூட அல்ல. வாழ்வை நடத்த வேண்டுமேயென்று கட்டுப்பாடுகளால் பிணைக்கப்பட்டு கடமையாற்றிக் கொண்டிருப்பவர் கள். ஆட்சிகள் பல மாறும்; புராணத்திலே வரும் இந்திரர்கள் போல! அதிகாரிகள் அப்படியே இருப்பர் இந்திராணி போல! அவர்களைப்பற்றி தப்புக் கணக்குப் போட்டு அவர்கள்மீது பாய்ந்திடுவது அர்த்தமற்றது என் பதை நன்றாக உணர்ந்திருக்கின்றனர் விடுதலைச் சேனையினர். உதாரணமாக ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப் படுகிறார், கிளர்ச்சிக்கு தடையாயிருந்தார் என்ற காரணத்திற்காக என்று வைத்துக் கொள்வோம் ;