இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சந்தைச் சுரக்கினைக் கொண்டுவந்து மன்னர்
- சந்நிதி யில்தவம் தான்கிடந்து
இந்தச் சரக்கிளை விற்றுமு தல்செய்
- இடந்தரு வீரெனக் கோரிநின்று
முந்தி விரித்துநம் நாட்டினில் வாணிய
- மூட்டை யவிழ்த்துக் கடை பரப்பிச்
சந்தியில் நின்றப றங்கியர் நம்மவர்
- சச்சர வால்மனம் தான் துணிந்தார்.
அப்பம் பகிர்ந்து கொடுக்கவந்த அந்த
- ஆதிக்குரங்கினைப் போற் புகுந்து,
செப்பிடு வித்தை பலபுரிந் தார் ; இந்தத்
- தேசத்தின் ஒற்றுமை சீர்குலைத்தார்.
ஒண்டுக் குடித்தனம் வந்தவன் வீட்டினை
- ஒத்திக்கு வைத்திடும் விந்தையைப்போல்
அண்டிப் பிழைத்திட வந்தவர் இந்திய
- ஆட்சி யுரிமையைப் பற்றி விட்டார்.
வாணிபம் செய்திட வந்தவர் நாடிதன்
- வாரீ சுரிமையைப் பெற்ற வர்போல்
காணியும் பூமியும் தம்மதென்றார் ; கிஸ்தி
- கட்டவும் வேண்டுமென் றணையிட்டார்.
இப்படி யாகநம் இந்திய பூமியை
- ஏப்பங்கள் விட்டு விழுங்கியவர்
கப்பங்கள் கட்டிட வேண்டுமென்று பாஞ்சைக்
- காவலன் தன்னையும் கேட்டு விட்டார்.