பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கட்டபொம்மன்
2
(வேறு)

சந்தைச் சுரக்கினைக் கொண்டுவந்து மன்னர்

சந்நிதி யில்தவம் தான்கிடந்து

இந்தச் சரக்கிளை விற்றுமு தல்செய்

இடந்தரு வீரெனக் கோரிநின்று


முந்தி விரித்துநம் நாட்டினில் வாணிய

மூட்டை யவிழ்த்துக் கடை பரப்பிச்

சந்தியில் நின்றப றங்கியர் நம்மவர்

சச்சர வால்மனம் தான் துணிந்தார்.

அப்பம் பகிர்ந்து கொடுக்கவந்த அந்த

ஆதிக்குரங்கினைப் போற் புகுந்து,

செப்பிடு வித்தை பலபுரிந் தார் ; இந்தத்

தேசத்தின் ஒற்றுமை சீர்குலைத்தார்.


ஒண்டுக் குடித்தனம் வந்தவன் வீட்டினை

ஒத்திக்கு வைத்திடும் விந்தையைப்போல்

அண்டிப் பிழைத்திட வந்தவர் இந்திய

ஆட்சி யுரிமையைப் பற்றி விட்டார்.


வாணிபம் செய்திட வந்தவர் நாடிதன்

வாரீ சுரிமையைப் பெற்ற வர்போல்

காணியும் பூமியும் தம்மதென்றார் ; கிஸ்தி

கட்டவும் வேண்டுமென் றணையிட்டார்.


இப்படி யாகநம் இந்திய பூமியை

ஏப்பங்கள் விட்டு விழுங்கியவர்

கப்பங்கள் கட்டிட வேண்டுமென்று பாஞ்சைக்

காவலன் தன்னையும் கேட்டு விட்டார்.