பக்கம்:விடையவன் விடைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi

உரை தரச் சொன்னர்கள். அவற்றிற்கு உரை எழுதப் புகுந்தால் விரியும். யமக அந்தாதியிலிருந்து பாடல்களை எழுதி உரை எழுதச் சொன்னல் இந்தச் சிறிய பகுதியிலே எழுத முடியுமா? எழுதினால் வேறு பயனுள்ள கேள்விகளுக் குப் பதில் எழுத இடம் இருக்குமா? ஆகையால் அத்தகை: கேள்விகளைக் கேட்க வேண்டாமென்று அன்பர்களுக்குத் தெரிவித்தேன். -

இந்தத் தொகுதியில் இலக்கண இலக்கியம், சமயம், பல்வகை என்று மூன்று பிரிவாகப் பிரித்து விளுக்களையும் விடைகளையும் வெளியிட்டிருக்கிறேன். ஐந்து இலக்கணம் சம்பந்தமான விடைகள், பழமொழி விளக்கங்கள் சொல் லின் பொருள், புலவர்களையும் நூல்க்ளையும் பற்றிய செய் திகள் முதலியவை இலக்கண இலக்கியப் பகுதியில் உள்ளன. பொதுவாகச் சைவம், வைணவம் பற்றிய விடை களும், சமய நூல்களைப் பற்றிய விடைகளும், பிறவும் சமயம் என்ற பகுதியில் இடம் பெற்றுள்ளன. பல்வகை என்பதில் பிற விடைகள் இருக்கின்றன,

அன்பர்கள் இந்தத் தொகுதி பயனுள்ளது என்று கருதி ஆதரவு தருவார்களாயின், மேலும் இத்தகைய தொகுதிகளை வெளியிடலாம் என்று எண்ணுகிறேன்.

“காந்தமலை கி. வா. ஜகந்நாதன் சென்னை-28, 28–11-72