பக்கம்:விதியின் நாயகி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 ஒய் சகடயோகம்: உம் யோகம் இன்னிக்கு இந்தி மினிட்டோட சரி. உம் கணக்கை செட்டில் செய்து கிட்டுப் போம்: ட்டத்தைப் பாதுகாக்க வேண்டியது நம்ம கடமை யிங்கற நல்லெண்ணம் உண்டாகாத வரையிலே, சமுதாயம் உமக்கு ஒரு நாளும் பரிவு காட்டவே காட்டாதுங்காணும்! என்ளுேட மானத்தைப் பணயம்வச்சு, உம்மோ..பணத்தைப் பெருக்கிக்கற ரகசிய நாடகம் இனியும் நடக்காதுங்காணும்: போம்!” என்று ஆத்திரம் சுழிக்கக் கூச்சலிட்டார். 'இப்பவே உம்மைக் கம்பி எண்ண வைச்சிருப்பேன்; பாவம், பிள்ளைகுட்டிக் காரராச்சேன்னு மன்னிச்சேன்!’ 'சங்கிலிப் பயல் பொய் சொல்ருனுங்க எசமான்!” -எண் சாண் உடம்பு ஒரு சாண் ஆனது! சங்கலி ஏளனமான நகையை உதிர்த்துவிட்டபடி, மானேஜர் சகடயோகத்தின் தலையைக் சகடக்காலை உருட்டு வது போல உருட்டி விட்டவகை ஒரு முறைப்பு முறைத்து விட்டுப்பேசினன்: 'நாஞ பொய் சொல்லுறேன்? அநாதைப் புள்ளையான நான் உங்க சொல்படி உங்க சோத்தை வந்து தின்னுருந்தேன்ன, நான் பொய் சொல்லித்தான் இருந்திருப் பேன். ஆளு, நான் இது வரைக்கும் சாப்பிட்டது எம் பணம் -நான் ராக் கண் பகல் கண் முழிச்சுச் சம்பாரிச்ச பணம். ஒரு வேளைச் சோறுன்னு சாப்பிட்டுக்கிட்டும், சாயாவும் கடு தண்ணியுமின்னு குடிச்சுக்கிட்டு நாணயமா நாளை ஒட்டுற ஏழைப்புள்ளை நான். நீங்க போலிப் பணக்காரங்களோடே சேர்ந்துக் கிட்டு, ரெண்டாம் ஆட்டம் முடிஞ்சதும், என்னெ வெளியே காவலுக்கு வச்சுப்புட்டு, நீங்கனல்லோரும் உள்ளே குடிச்சிங்கங்கற விசயமே எனக்கு இப்பத்தான் பட்டுச்சு நான் சின்னப்புள்ளே. இதெல்லாம் இதுவரை எனக்கு விளங்கல்லே!’ என்று சொல்லி உள்ளே ஓடிவிட்டுத் திரும் பினன். அவன் கைகளில் சாக்கடை நாற்றம் வீசியது. ஐந்தாறு அழகிய பிராந்திப் புட்டிகள்-வெறும் சீசாக்கள் இருந்தன,அவனது கரங்களில். 'இதெல்லாம் நீங்க கொல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/73&oldid=476483" இலிருந்து மீள்விக்கப்பட்டது