புரியாத புதிர்
293
வைத்தேன். அவள் என்னைத் தடுத்து நிறுத்தி எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டாள்.
நான் திரும்பி, "ஏன், தெரியவில்லையா? எலெக்ட்ரிக் லைட்டின் வெளிச்சம்தான் பட்டப் பகலைப்போலக் கண்ணைப் பறிக்கிறதே!" என்றேன்.
"தெரியாமல் என்ன படுக்கவா போகிறீர்கள்!" என்று கேட்டாள்..."
“ஆமாம்!"
"திறந்த வெளியிலா...?"
“ஆமாம்!”
"கொட்டும் பனியிலா?”
“ஆமாம்!”
"ஏன், உள்ளே படுப்பதற்கு என்ன குறைச்சலாம்?”
"நீ இருக்கிறாய்; உன்னுடைய அருமையான குழந்தைகள் இருக்கின்றன; இன்னும் வேறு என்ன வேண்டும்?”
“ஒரு சாண் கயிறுதான் வேண்டும்!”
"ஒரு சாண் என்ன, ஒரு முழம் வேண்டுமானாலும் தருகிறேன்!”
"என்னை ஏன் இப்படி எடுத்ததற்கெல்லாம் கரிக்கிறீர்கள்? உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றால் சொல்லிவிடுங்களேன்!”
"பிடிக்கவில்லை என்றால் உடனே பிறந்தகத்துக்குப் போய்விடுவாய்; அவ்வளவுதானே? - பேஷாய்ப்போ இப்பொழுதே வேண்டுமானாலும் போ!" என்று சொல்லி விட்டு நான் மாடிக்குச் சென்றேன்.
கீழேயிருந்து விம்மல் சத்தம் வந்தது! அதைப் பொருட்படுத்தாமல் நான் படுக்கையை விரித்துப் படுத்தேன்.
விம்மல் சத்தம் தொடர்ந்தது!
சிறிது நேரமாவது நிம்மதியாக இருந்துவிட்டு வரலாம் என்று எண்ணி மாடிக்கு வந்த எனக்கு இது என்ன சோதனை? இந்த சோதனைக்கு யார் காரணம்?
நான்தான் காரணம் என்றால், அந்தக் காரணத்துக்கு நான் ஏன் ஆளானேன்?