பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 217

14. போராட்டம்: பாடுவோரோ அல்லது பிடிப்பவரோஒருவரை ஒருவர் தொடத் தொடங்குகிற பொழுதே போராட்டம் (Struggle) ஆரம்பித்து விடுகிறது. . . . . . .

15. பாடிச் செல்லும் முறை பாடிச் செல்வோர் எதிர்க் குழுவினரின் பகுதிக்கு பாட்டுடன் செல்வதையே பாடிச்செல்லுதல் (Raid) என்கிறோம். எதிர்க்குழு பகுதிக்குச் சென்ற அவர், பாடிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு முறையாவது, பாடிச் செல்லும்

கோட்டைக் கடந்துவிட்டு, பிறகு மூச்சுடன் தன் பகுதிக்கு வந்து -

சேர்வதையே வெற்றிகரமாய்ப் பாடிச் செல்லுதல் என்கிறோம். பிடிப்பவர் அல்லது பிடிப்பவர்களைத் தொட்டுவிட்டால், அவர் பாடிச்செல்லும் கோட்டைக் கடந்து செல்ல வேண்டியது தேவையில்லை. . . . . -

குறிப்பு: பாடிச் செல்லும் கோட்டைக் கடத்தல் (Baulk Line) என்பது, பாடுவோரின் உடலில் எந்தப் பகுதியும் பாடிச் செல்லும் கோட்டுக்கும் நடுக்கோட்டுக்கும் இடையில் இல்லாமலிருந்து, முழு பாகமும் பாடிச்செல்லும் எல்லையைக் கடந்தே இருக்க வேண்டும். 3. ஆட்டக்காரர்களுக்கு அறிவுரை

1. நாணயத்தைச் சுண்டி எறிவதில் வெற்றி பெறுகிற குழு, பக்கமா அல்லது பாடிச் செல்வதா என்பதைத் தெரிவு செய்யும். இரண்டாவது ஆட்ட நேரப் பருவத்தில் (Hall), குழுக்கள் தங்கள் பக்கங்களை (Court) மாற்றிக்கொள்ளவேண்டும்.அடுத்த குழுவினர், பாடிச்செல்வோரை முதலில் அனுப்ப வேண்டும். முன் ஆட்டநேரப் பருவம் முடிந்த பொழுது மிஞ்சி இருந்த ஆட்டக்காரர்களைக் கொண்டே இரண்டாவது பருவத்தின் ஆட்டம் தொடங்கும்.

2ஆடும்நேரத்தில் ஆடுகளத்தைவிட்டுவெளியேபோகின்ற

ஆட்டக்காரர் வெளியேற்றப்படுவார். ஆட்டநடுவர்கள் அத்தகைய ஆட்டக்காரர்களை உடனே வெளியேற்றிவிடவேண்டும்.

(அ) எல்லையைவிட்டு வெளியே சென்ற பிடிப்பவர் ஒருவர். - -

பாடுவோரைப் பிடித்துவிட்டால், பாடுவோர் வெளியேற்றப்பட மாட்டார் (Not out) என்று அறிவிக்கப்படுவார். இன்னும், அவர் தன்னுடைய பக்கத்திற்குப் பத்திரமாக வந்து சேர்ந்ததாகவும் கூறப்படுவார். அத்துடன், அவரைப்பிடிக்கும்போராட்டத்தில் கலந்து கொள்ளும் அத்தனை ஆட்டக்காரர்களும் வெளியேற்றப்படுவார்கள். 3. ஒரு ஆட்டக்காரரது உடலின் எந்தப் பகுதியாவது ஆடுகளத்திற்கு வெளியே தொட்டுக் கொண்டிருந்தாலும், அந்த