பற்றிய எனது சிந்தனைகளையெல்லாம் தொகுத்து இங்க
நூலை உருவாக்கி இருக்கிறேன்.
இந்நூலில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் இத் தக்க ஆண்டுகளாக விளையாட்டுத் துறையில் பங்கேற்றும், பணி யாற்றியும், பார்த்தும் மகிழ்ந்து உணர்ந்த அனுபவங்க
ளாகும,
ஒரு சில கருத்து த்கள் வாசகர்களுக்கோ மற்றவ1 களுக்கோ ஏற்புடைத்ததாக இல்லாமல் இருக்கலாம்.
என்ருலும் சொல்ல வேண்டும் என்று நான் விரும்பிய கருத்துக்களே சொல்லியிருக்கிறேன். விளையாட்டுலகில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும், அதிகமான பலன்களைப் பொ வேண்டும், என்ற என் சிந்தனையில் ஒன்றிய கருத்துக்களே அதிக அளவில் இடம் பெற்றிருக்கின்றன.
இந்நூலைப் படிக்கும் வாய்ப்புள்ள அன்பர்கள், நன்கு ம்ெ திக்க வேண்டும்! நமக்குள்ள நிலைக்கு யார் காரணம், ய காரணம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நம்மவ கள் புரிந்து கொண்டு விட்டால், பிறகு ஆக்க புர்வமாக செயல்கள் புரிய அதிக நேரம் பிடிக்காது என்கிற ஆசை பி. வடிவே இந்நூலாய் வெளிவருகிறது.
விேளையாட்டுச் சிந்தனைகள், என்று இந்நூலை உருவா , ! யிருக்கிறேன். புதிய முயற்சி தான். இதில் எந்த அளவில் வெற்றி பெற்றிருக்கிறேன் என்பது அன்பர்களின் ஆதரவை பொறுத்தே இருக்கிறது.
எனது எல்லா நூல்களையும் ஏற்று ஆதரித்த அன்பர்கள் உலகத்திற்கு, விளையாட்டுச் சிந்தனைகளைக் கொடுத்திருக் கிறேன். உங்கள் அன்பும் ஆதரவும் இது போன்ற படி நூல்களை உருவாக்க உதவும் என்ற நம்பிக்கையில் வழங்கி யிருக்கிறேன்.
வணக்கம்
ஞானமலர் இல்லம்
s: செல்ல சென்னை-17 எஸ், தவராஜ செலயை