பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

قي 64 விளையாட்டு அமுதம் - தழுவிக் கொள்ளும் என்று முடிவாகவும் கூறி விட்டனர். ஆஸ்திரிய நாட்டின் நல்ல மாணவரான ஹேமர் பர்க்ஸ்டால் என்பவர் தான், அவருடைய இறப்பை எண்ணி, தனக்காக கல்லறை ஒன்றை தானே எழுப்பிக் கொண்டார். எழுப்பிவிட்டு தனது இறப்பை எதிர் பார்த்துக்கொண்டிருந்த ஹேமர் இறக்காமல், அதற்குப் பிறகும் 36 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். எப்படி என்று கினைக்கிறீர்கள்? அவர் ஒவ்வொரு நாளும் தனது கல்லறையைப் பார்ப்பதற்காக ஒடிச் செல்வது வழக்கமாம்.அவர் தினக் தினம் ஒடி ஒடிச் சென்ற பழக்கமே, உடற்பயிற்சியாக மாறி, அந்த உடற்பயிற்சியே இறப்பைத் தடுத்து 36 ஆண்டுகளுக்கு மேல் வாழவைத்திருக்கிறது. ஹேமரின் கல்லறை வெறுங் கல்லறையாக இருந்து, வரலாற்றில் இடம் பிடித்துவிட்டது. உடற்பயிற்சியும் உலகினருக்கு ஒரு விழிப்புணர்ச்சியை ஊட்டி விட்டது. கயிறு இழுக்கும் போட்டி! 1899ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 12ந் தேதி, இந்தியாவில் உள்ள ஜபல்பூரில், கயிறு இழக்கும் போட்டி ஒன்று நடைபெற்றது. பங்கு பெற்றவர்கள் இராணுவ வீரர்கள். இருகுழுவினரும் அந்தப் போட்யில் பங்குபெற்று. ஒரு முறை இழுக்கும் போட்டியில் (Pull) இழுத்து வெற்றி