பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20




ஏறத்தாழ எட்டு ஆண்டுகளுக்கு முன் மறைந்து போன மல்யுத்த வீரர் கிங்காங் என்பவரை மாமிசமலை என்றே அழைப்பார்கள். அவர் சாப்பிடும் அளவை 100 முட்டை, பத்து கிலோ கறி என்பது போல ஆளுக்கு ஆள் அவ்வளவு இவ்வளவு என்று வித்தியாச மான அளவில் கூறி, மற்றவர்களை வியப்பில் ஆழ்த்து வார்கள். நம் காலத்து மல்யுத்த வீரர் நிலையே இப்படி என்ருல், பயங்கர மல்யுத்தம் புரிகின்ற ஒலிம்பிக் பந்தய வீரனது உணவு அளவைப் பற்றி எவ்விதம் கூறியிருப்பார்கள் என்பதற்குக் கீழே விளக்கப்பட்டி ருக்கும் உணவின் அளவே சான்ருக அமையும்.

வீரன் மிலோவின் அன்ருட உணவானது 20 பவுண்டு கறி, 20 பவுண்டு ரொட்டி. 18 பின்ட் ஒயின் என்பதாகக் குறிப்பிடுகின்ருர்கள். அவனுக்கு இருந்தது வயிரு அல்லது ஏற்றம் இறைக்கும் சாலா என்று தான் நமக்கு எண்ணத் தோன்றுகிறது.

இதையும் மிஞ்சிவிடுவது போல இன்னுெரு உணவின் அளவு பாருங்கள். ஒலிம்பிக் பந்தயம் நடக்கின்ற நாளில், நான்கு வயதுள்ள கன்றுக்குட்டி ஒன்றைத் தோளில் போட்டு சுமந்து கொண்டு, ஒலிம்பியாவில் உள்ள பந்தயம் மைதானம் முழு வதையும் சுற்றித் திரிந்து வருவானம். பிறகு, அதே நாளில் அதைக் கொன்று, அதை ஒரே நாளில் தின்று தீர்த்து விடுவாளும். அப்படியென்ருல் அவன் உணவு உட்கொள்ளும் ஆற்றலையும் சக்தியையும் பாருங்களேன்!

இப்படி உண்பவனுக்கு இராட்சச பலம் இருக் காதா? ஆமாம்! அவனது தேக பலத்தையும்