பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

சென்று, அங்கே கொடுத்து முடித்த பின்னரே பள்ளிக்குப் போக முடியும். அதனால் தினமும் பள்ளி தொடங்கிய பின்னரே, கால தாமதமாக வகுப்புக்கு வருபவன். அதற்காக ஆசிரியர் தரும் தண்டனையைப் பெறுவான். ஆனாலும் எல்லாப் பாடங்களிலும் முத லிடம் பெறும் புத்திசாலி, கெட்டிக்காரன். பாடம் தவிர, சேமிப்பு, கட்டுரைப் போட்டி முதலியவற் றிலும் கெட்டிக்காரன். அதனால் அவனை முருகு முத லிய மாணவர்கள் விரும்புகிறார்கள். புகழ்கிறார்கள்.

அறிவானந்தம் பெறும் புகழைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிங்காரம் எப்படியாவது, எதிலா வது அவனை வென்று புகழ்பெற விரும்புகிறான்.

சிங்காரம் எதிர்பார்த்த சந்தர்ப்பம் வருகிறது. அறி வானந்தம் தனக்குக் கிடைக்கும் சிறு தொகையையும் சேமிப்பில் போட்டுச் சேர்த்து வந்தான். சேமிப்பில் அவனுக்கு முதலிடம்.

திடீரென்று அவன் தாயாருக்கு உடல் நலம் குறைந்து நோயுற்று மருத்துவ மனையில் இருந்தார். அப்போது அறிவானந்தம் சேமித்த பணம் உதவியது. அதைக் கொண்டே மருந்து வாங்கினான். டாக்டர் நாதன் அவனது சேமிக்கும் பண்பைப் பாராட்டுகிறார். பள்ளியில் நடக்கும் சேமிப்பு விழாவில் ஒரு பேச்சுப் போட்டி நடக்கவிருந்தது. அதற்குரிய பேச்சை அவன் எழுதி வைத்திருந்தான். டாக்டர் நாதன் அதை வாங்கிப் படித்துப் பார்த்துப் பாராட்டுகிறார். ஆனால், அறிவா னந்தம் எப்போதும் தாயருக்கு அருகே இருந்து கவ